நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்தடுத்து பல பான்-இந்தியா படங்களில் நடிக்க இருக்கிறார். இப்போதைக்கு, அவர் 'ராக்கா' என்ற தனது புதிய படத்துக்காக பயங்கர பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட இருப்பதால், அல்லு அர்ஜுன் அடுத்த சில மாதங்களுக்கு மும்பையில் தங்குவார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் மும்பை ஜூஹு பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட்டை வாடகைக்கு எடுத்திருப்பதாகவும், சில முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரராக மாறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
24
அல்லு அர்ஜுன் எவ்வளவு வாடகை கொடுக்கிறார்?
ஒரு முன்னணி ஆங்கில ஊடகத்தின்படி, அல்லு அர்ஜுன் மும்பையின் மிகவும் காஸ்ட்லியான பகுதியான ஜூஹு தாரா சாலையில் 5BHK அப்பார்ட்மென்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். மூன்று வருட லீஸ் ஒப்பந்தம் போட்டுள்ள அவர், மாதத்திற்கு 16 லட்ச ரூபாய் வாடகை கொடுக்கப் போகிறாராம். இந்த அப்பார்ட்மென்ட் சுமார் 6,000 சதுர அடியில் அமைந்துள்ளது. இதில் ஒரு சிறிய நீச்சல் குளம் மற்றும் நான்கு கார்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் உள்ளது. அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகா மற்றும் குழந்தைகள் அயன், அர்ஹா ஆகியோருக்காக கடல் தெரியும் வீடு வேண்டுமென விரும்பியதாக கூறப்படுகிறது.
பள்ளி விடுமுறையின் போது, குழந்தைகள் அவருடன் வந்து தங்குவார்கள். பசுமையான சூழல், மனதை மயக்கும் கடல் அலைகளின் சத்தம் என அமைதியான ஓர் இடம் வேண்டும் என அல்லு அர்ஜுன் கேட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'ராக்கா' மற்றும் லோகேஷ் கனகராஜ் உடனான ஒரு புதிய படத்தின் ஷூட்டிங்கும் மும்பையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
34
மும்பையில் யாருக்கு பக்கத்து வீட்டுக்காரர்?
அல்லு அர்ஜுன் இனி கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் மற்றும் அனுஷ்கா சர்மா - விராட் கோலி தம்பதியினரின் பக்கத்து வீட்டுக்காரராக இருப்பார். அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத்தில் 'பிளெஸ்ஸிங்' என்ற பெயரில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பிரம்மாண்ட பங்களா உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த 8,000 சதுர அடி பங்களாவில் நீச்சல் குளம், எளிமையான இன்டீரியர் மற்றும் ஒரு பெரிய போர்டிகோ உள்ளது.
இயக்குநர் அட்லீயின் 'ராக்கா' படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் தீபிகா தனது கர்ப்பத்தை அறிவித்திருந்தார். கர்ப்பமாக இருந்தாலும், அவர் படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்பார் என தெரிகிறது. இந்த சயின்ஸ்-ஃபிக்ஷன் படத்தில் முதலில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தீபிகாவின் வசதிக்காகவே அல்லு அர்ஜுன் மும்பையில் தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் 800 கோடி ரூபாய் என்றும், இதில் மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. இப்படத்தை அட்லீ இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.