தாக்கப்பட்ட புஷ்பவனம் குப்புசாமி மகள்..! சிசிடிவி கேமராவால் வெளியான பகீர் உண்மை..!

First Published Dec 10, 2020, 11:43 AM IST

புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்பு சாமி மீது பொய்யான புகார் கொடுத்தது மட்டும் இன்றி, அவரது மகளையும் தாக்கியது குறித்து, காவல் துறை விசாரித்து உண்மையை கண்டுபிடித்துள்ளது. 
 

புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்பு சாமி மீது பொய்யான புகார் கொடுத்தது மட்டும் இன்றி, அவரது மகளையும் தாக்கியது குறித்து, காவல் துறை விசாரித்து உண்மையை கண்டுபிடித்துள்ளது.
undefined
சென்னை, அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார் புஷ்பவனம் குப்புசாமி. இவர் அபிராமபுரத்தை சேர்ந்த 17 மற்றும்18 வயதுடைய அக்கா, தங்கைகள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டு வேலைகள் செய்ய சேர்த்ததாகவும், அவர்கள் தங்களுக்கான சம்பளத்தை கேட்டபோது, அதெல்லாம் தர முடியாது என கூறி அனுப்பியதாகவும் கூறப்பட்டது.
undefined
இதுகுறித்து தனது தாயாரிடம் அந்த சிறுமிகள் கூறிய போது, அவரது தாயார் இது குறித்து பலரிடம் கூறியுள்ளார். பின்னர் மறுதினம் வேலைக்கு சென்ற சிறுமிகளை எப்படி என்னைப்பற்றி வெளியில் பேசலாம் என்று சத்தம்போட்டு கதவை பூட்டி, வீட்டுக்குள் அடைத்து வைத்து மிரட்டியதாகவும் கூறி அந்த இரு சிறுமிகளின் தாயார் ஜெயந்தி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
undefined
இந்த புகாரின் பேரில்... புஷ்பவனம் குப்பு சாமியின் வீட்டு சிசிடிவி கேமராவை சோதனையிட்ட போது பல உண்மைகள் தெரிய வந்ததுடன் புஷ்பவனம் குப்பு சாமி மீது அந்த சிறுமிகள் பொய் புகார் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
undefined
புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவியும் இல்லாத நேரத்தில், அங்கு தாயுடன் சிறுமிகள் வந்து ரகளை செய்தது மட்டும் இன்றி, குப்புசாமியின் மகளை அடித்ததும் பதிவாகியுள்ளது. சிறுமிகள் கொடுத்த ஆதார் கார்டு விவரத்திலும், பிறந்த தேதி மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, இரு தரப்பும் தற்போது இந்த விவகாரத்தை பெரிதாக்காமல் சமரசமாக போக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
undefined
click me!