அவர் பேசியதாவது : “ஷாருக்கானின் சக்தே இந்தியா படத்தை தான் பிகில் என்கிற பெயரில் அட்லீ எடுத்துள்ளார். அதுல ஹாக்கி, இதுல கால்பந்து. தயாரிப்பாளரை எட்டி எட்டி உதைத்துவிட்டார் இயக்குனர். ஏஜிஎஸ் பெரிய கம்பெனி என்பதால் அப்படத்தை சமாளித்தார்கள். 5 ஆயிரம் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளை நடிக்க வைத்துவிட்டு அதுல 10 சதவீதம் கமிஷன் வாங்கி உள்ளார் இயக்குனர்.
தயாரிப்பாளர்களிடம் 30 கோடி, 40 கோடினு சம்பளம் வாங்கிட்டு ஜூனியர் ஆர்டிஸ்ட் சம்பளத்தில் 10 சதவீதம் கமிஷன் வேற வாங்குறது. ஞாயமா இதெல்லாம். நிக்குமா இந்த பணம். அதனால தான் நீ எடுத்த படம் ரெண்டுமே அவுட்டு. இவர்கள் எல்லாம் துரோகிகள்” என சரமாரியாக அட்லீயை வெளுத்து வாங்கி இருக்கிறார் கே.ராஜன். அவரின் இந்த பேச்சை கேட்டு நடிகர் மிர்ச்சி சிவா விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... பேஷன் ஷோவுக்கு தங்க நெக்லஸ் போட்டுட்டு வந்தது குத்தமா? நடிகை டாப்ஸியை ரவுண்டு கட்டி விளாசும் நெட்டிசன்கள்