bayilvan ranganathan
திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களை ஏற்று நடித்தி வந்த பயில்வான் ரங்கநாதன் முந்தானை முடிச்சு படத்தில் வைத்தியராக அறிமுகமாகி இருந்தார். இதன்பின் முன்னணி நாயகர்களின் பல படங்களில் தோன்றியிருந்த இவர் தற்போது சினிமா விமர்சிகராகவும் செய்தியாளராகவும் வலம் வருகிறார்.
இவர் தனது யூட்யூபில் அவ்வப்போது நடிகைகள் குறித்து பேசுவது சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அதிலும் முன்னணி நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து அப்பட்டமாக இவர் கூறி பேசும் பொருளாகி வருகிறார்.
சமீபத்தில் கூட இரவில் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்த ரேகா நாயர் குறித்து இவர் பேசி இருந்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது. பின்னர் திருவான்மியூர் பீச்சில் பயில்வான் நடை பயிற்சியில் ஈடுபட்டபோது அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் ரேகா நாயர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு இருக்கும் சூழலில் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து விளக்கி விட்டிருந்தனர்.
மேலும் செய்திகளுக்கு...சிம்மிஸ் மட்டும் அணிந்து தாறுமாறு கவர்ச்சி.. சாக்ஷியின் கிளாமர் அலப்பறை
k.rajan
இந்நிலைகள் சமீபத்தில் பேட்டி அளித்துள்ள தயாரிப்பாளர் கே ராஜன் ரங்கநாதன் நடிகைகள் குறித்து பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், அவரிடம் நேரடியாக நம் வீட்டில் பெண் பிள்ளைகள் உள்ளது அதனால் இப்படி பேசாதீர்கள் என கூறியதாகவும், அப்போது மீனாவின் கணவர் இறந்தது குறித்து மிருகத்தனமாக அவர் பேசியதால் தனக்கு கோபம் வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...Aishwarya rai bachchan : அந்தரங்க கேள்விக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் அளித்த ‘நச்’ பதில்
மேலும் பயில்வான் ரங்கநாதனின் பேச்சு குறித்து காவல்நிலையத்தில் தான் புகார் கூறியிருக்கிறேன், பல நடிகைகள் இவர் குறித்து விமர்சிக்க தயாராக இல்லை. ஏனென்றால் அவர்கள் குறித்தான கட்டுக்கதையையும் பயில்வான் அவிழ்த்து விட்டுவிடுவார் என பயப்படுகிறார்கள். ஆனால் ராதிகா, ரேகா நாயர் இருவரும் பெண் வீராங்கனைகள் போல பயில்வானுடன் நடுரோட்டில் சண்டையிட்டு தன் காலில் கிடப்பதை கழட்டி அடிப்பேன் என்று பேசியது வரவேற்பதக்கது என கூறியுள்ளார்.