பிரபல எழுத்தாளர் கல்கி சோழ மன்னர்களை பற்றிய வரலாற்றை, புனையப்பட்ட கதையாக எழுதிய நாவல் தான் 'பொன்னியின் செல்வன்'. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த நாவலை, எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்கள் திரைப்படமாக எடுக்க முயன்ற போதிலும், சில காரணங்களால் அது முடியாமல் போனது. இதே கதையை, திரைப்படமாக எடுக்க வேண்டும் என, சுமார் 20 ஆண்டுகளாக முயற்சித்து வந்தவர் பிரபல இயக்குனர் மணிரத்னம். பட்ஜெட் காரணமாக இந்த படத்தின் பணிகள் தாமதமாகிக்கொண்டே சென்ற நிலையில், ஒரு வழியாக 500 கோடி பட்ஜெட்டில் தற்போது இந்த படத்தை படமாக்கியுள்ளார்.