கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி. மேலும் சமீபத்தில், போதை மருந்து வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு... பின்னர் பல மாதங்கள் சென்று, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
undefined
இந்நிலையில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வந்தனா ஜெயின் என்பவரை தாக்கியதாக தற்போது இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
undefined
பொதுவாகவே பிரபலங்கள் அடிக்கடி மிட்நைட் பார்ட்டியில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில், அவர்கள் இதுபோன்ற இடங்களுக்கு செல்வது, வழக்கமான ஒன்றாக இருக்கிறது. வெளியில் சென்றால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வதால், சுதந்திரமாக வெளியில் செல்லாமல் இருக்கும் பல பிரபலங்கள் இதுபோன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதை மட்டுமே பொழுது போக்காக வைத்துள்ளனர்.
undefined
இந்நிலையில் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி, சஞ்சனா கல்ராணி, கன்னட தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் மீது பீர் பாட்டிலை வீசி உடல்ரீதியாக தாக்கி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
undefined
சஞ்சனா தாக்கியதில் வந்தனா ஜானுக்கு பார்வை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, வந்தனா சார்பில் கப்பன் பார்க் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக வந்தனா ஜெயின் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
undefined
வந்தனாவின் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சஞ்சனா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கப்பன் பார்க் போலீசாருக்கு உத்தரவிட்டது, இதை தொர்ந்து கப்பன் பார்க் போலீசார், நடிகை சஞ்சனா மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை மீண்டும் துவங்கியுள்ளனர்.
undefined