இனி முல்லையாக நடிக்கப்போவது இவர் தான்... முதன் முறையாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படங்கள்...!

First Published Dec 21, 2020, 7:21 PM IST

இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளவர் குறித்து புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

விஐய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு.
undefined
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், ஜோடிதான். நடிகை சித்ராவும் நடித்து வந்தனர்.
undefined
விஜே சித்ரா சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதில் முல்லை கதாபத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. சமீபத்தில் கூட சரண்யா, முல்லை கதாபாத்திரத்தில் சமீபத்தில் போவதாக தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்து சரண்யா தனது சமூக வலைதளத்தில் விளக்கமளித்தும் இருந்தார்.
undefined
“பாரதி கண்ணம்மா” சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
undefined
தற்போது சித்ரா முல்லையாக நடித்த காட்சிகள் டிசம்பர் 23ம் தேதி வரை மட்டுமே ஒளிபரப்பாகுமாம். அதன் பின்னர் காவ்யா தான் முல்லையாக தோன்ற உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது கிடைத்துவிட்டது.
undefined
ஆம், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் ஸ்ரீவித்யா தனது சோசியல் மீடியா பக்கத்தில் இனி முல்லையாக நடிக்க உள்ள காவ்யாவிற்கு ஆதரவு தரும்படி ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.
undefined
அதில் காவ்யா அச்சு அசலாக முல்லை வேடத்தில் இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் அவர் தான் இனி முல்லையாக தோன்றுவார் என்பது தெரிந்துவிட்டது. மேலும் டிசம்பர் 23 முதல் காவ்யா திரையில் தோன்றுவார் என்பது உறுதியாகிவிட்டது.
undefined
click me!