அதை பற்றி கேட்காதீர்கள்..! ஆரவ் திருமணத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? உண்மையை உடைத்த ஓவியா..!

First Published Nov 4, 2020, 7:34 PM IST

பிக்பாஸ்  முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவிற்கு செப்டம்பர் மாதம் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்த நிலையில், ஏன் இவரது திருமணத்தில் ஓவியா கலந்து கொள்ளவில்லை என்பதை முதல் முறையாக ரசிகர்களிடம் கூறியுள்ளார்.
 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் டிஆர்பி-க்கு முக்கியமாக உதவிய சமாச்சாரம் என்றால் அது ஆரவ் - ஓவியா காதல் விவகாரம் தான். ஓவியா இவரை காதலித்ததாலேயே இவருக்கு இந்த நிகழ்ச்சியில் முக்கியத்துவம் கிடைத்தது.
undefined
பட்டி, தொட்டி எல்லாம் இளசுகளின் மனதை கவர்ந்த ஓவியா, ஆரவ்வை காதலிப்பதாக அறிவித்தார். ஆனால் ஆரவ் அதற்கு பிடிகொடுக்கவில்லை.
undefined
இதனால் ஓவியா அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற ஆரவ் கடைசி வரை இருந்து டைட்டில் வின்னராக மாறினார். இதற்கு ஓவியாவின் ரசிகர்களும் உறுதுணையாக இருந்தனர்.
undefined
மாடலிங் துறையில் கலக்கி வந்த ஆரவ் தற்போது சினிமாவில் ஹீரோவாக அசத்தி வருகிறார். ’ராஜபீமா’, ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
undefined
அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியோடு ஆரவ், ஓவியா காதல் முறிந்துவிட்டதாக ரசிகர்கள் நினைத்த நிலையில், இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றிய புகைப்படங்களை தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்.
undefined
இருவரும் லிவிங் டுகெதராக வாழ்வதாக வதந்தி பரப்பட்ட நிலையில், தனது நண்பர் என்றும், தனக்கு பெரிதாக திருமணத்தில் நம்பிக்கை கிடையாது என்றும் ஓபனாக பதிலளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஓவியா.
undefined
இந்நிலையில் ஆரவ்விற்கும் ராஹே என்ற நடிகைக்கும் செப்டம்பர் 6ம் தேதி ) திருமணம் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
undefined
ஆனால் ஓவியா மட்டும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அது ஏன் என்கிற கேள்வியை தொடர்ந்து, ஓவியாவின் ரசிகர்கள் எழுப்பி வந்த நிலையில் முதல் முறையாக உண்மையை கூறியுள்ளார்.
undefined
இதுகுறித்து அவர் கூறுகையில், "அந்த திருமணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்போது நான் கேரளாவில் இருந்ததால் தான், திருமணத்தில் பங்கு கொள்ள முடியவில்லை. எங்கள் இருவருக்குள் என்ன இருந்ததோ அது முடிந்துவிட்டது. திரும்ப திரும்ப அதை பற்றி கேட்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.
undefined
click me!