சூப்பர் ஹிட் படத்தில் ஷாரூக்கானுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு..! உதறி தள்ளிய நயன்தாரா..!

First Published Jul 16, 2020, 4:20 PM IST

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கோலிவுட் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இவர் நடிகர் ஷாருகானுடன் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என தவிர்த்து விட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஏன் அந்த படத்தில் நடிக்க மறுத்தார் நயன்தாரா என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க...
 

அடுக்கடுக்காக வெற்றி படங்களில் நடித்து தன்னுடைய திறமையை நிரூபித்துள்ள நயன்தாரா, தமிழில் அடுத்ததாக காதலர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள, 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்கிற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் மற்றொரு நாயகியாக நடிகை சமந்தாவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
மற்ற நடிகைகளை விட, நயன்தாரா தனித்தே பார்க்கப்படுகிறார். இதுவே அவரின் வெற்றியாகவும் இருக்கிறது. இவரின் அழகு, நடிப்பு, திறமை, குணம், நடிப்பின் மீது கொண்டுள்ள பற்று தான், இன்று இந்த அளவிற்கு இவரை உயர்த்தியும் உள்ளது.
undefined
இந்நிலையில் நடிகர் ஷாருகான் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்திற்காக படக்குழுவினர் நடிகை நயன்தாராவை அணுகிய உங்களுக்கு தெரியுமா? ஆனால் இது நடிகை தீபிகா படுகோன் நடித்த கதாபாத்திரத்திற்கு அல்ல, ஒன்... டூ... திரி... ஃபோர் என தொடங்கும் ஐட்டம் பாடலுக்கு. ஆனால் இதில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டதால் அந்த பாடலுக்கு மற்றொரு கோலிவுட் நடிகையான ப்ரியாமணி டான்ஸ் ஆடினார்.
undefined
இந்த வாய்ப்பை ஏற்ற மறுத்த நயன்தாரா, ஏன் நடிக்க வில்லை என்கிற காரணத்தை படக்குழுவிடம் தெரிவிக்க வில்லை.
undefined
பின்னர் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைதியாது. நடிகர் ஷாருகான் மற்றும், தீபிகா திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இன்று வரை உள்ளது. இந்த படத்தில் டான்ஸ் ஆடியதால் மூலம், நடிகை ப்ரியா மணியும் பாலிவுட் திரையுலகில் பிரபலமாக மாறினார்.
undefined
400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த இந்த படத்தில், நடிகர் சத்திய ராஜ், நிகிதின் தீர், காமினி கௌஷல் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.
undefined
click me!