இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ திரைப்படத்தில், ஜெயலலிதாவை நினைவுபடுத்தும் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். அது அவரது முதல் தமிழ் திரைப்படம் என்பதாலும், அவரது தோற்றம் மற்றும் திரைநடிப்பு ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றது.
அந்த படத்தை பார்த்த பிறகு, “ஜெயலலிதாவின் இளமைக் கால தோற்றத்தை மிக நெருக்கமாக கொண்டு வந்த நடிகை” என்ற பாராட்டும் ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. அதுவே பின்னர் ஜெயலலிதாவின் மனதில் ஒரு தனி இடத்தை உருவாக்கியதாக சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன.
அரசியலுக்கும் சினிமாவுக்கும் இடையிலான இணைப்பு
தமிழக அரசியலில் சினிமாவுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என பல தலைவர்கள் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். அந்த வரிசையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை எப்போதுமே சினிமாவை விட சினிமாவாக இருந்தது.
அதனால் தான், அவரது வாழ்க்கையை யார் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி பல ஆண்டுகளாக ரசிகர்களிடையே இருந்தது. ஆனால், அதற்கான பதிலை ஜெயலலிதாவே தனது விருப்பத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் என்பதே தற்போது பேசப்படும் விஷயமாகியுள்ளது.