கர்ப்பத்தையே கலைத்துள்ளார் - இசையமைப்பாளரால் பாலி*ல் தொல்லைக்கு ஆளான பாடகி! பிக்பாஸ் பிரபலத்தின் சகோதரியோ?

Published : Apr 30, 2026, 03:09 PM IST

Swagatha Krishnan: பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், ஒரு இசையமைப்பாளரால் பாலி*ல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதன் காரணமாகவே இசை துறைக்கு முழுக்கு போட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

PREV
17
Metoo ஹேஷ்டேக்

சமீப காலமாகவே தொடர்ந்து பல நடிகர், நடிகைகள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு தொழில் ரீதியாக நடக்கும் அநியாயங்களை வெளிப்படையாக கூறி வருகிறார்கள். குறிப்பாக 2018 மற்றும் 2019 -ஆம் ஆண்டுகளில், Metoo என்கிற ஹேஷ்டேக் மூலம் பிரபல பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது முன்வைத்த குற்றச்சாட்டு தற்போது வரை பேசும் பொருளாகவே இருந்து வருகிறது என்பது பலரும் அறிந்தது தான்.

27
பாலி*ல் தொல்லை:

இந்த நிலையில் தான் பிரபல பாடகியும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான போட்டியாளர் மாயா கிருஷ்ணனின் சகோதரியான ஸ்வாகதா கிருஷ்ணன், இவர் தான் தற்போது மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் மீது கடுமையான பாலி*ல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் இவர் கூறும் போது, "நான் கொடூரமான அதில் அவர், ஒரு கொடூரமான பாலில் தொல்லை கொடுப்பவர்களால் பாலி*ல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன். இந்த மோசமான அனுபவம் தான் நான் இசை துறையில் இருந்து முழுமையாக விலக காரணம். தற்போது ரிஷிகேஷில் மிகவும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் கூட, அந்த கொடுமையான விஷயத்தில் இருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை. அந்த பிரபலமான இசையமைப்பாளர் ஒரு பெண்ணை மட்டும் அல்ல பல பெண்களை நாசமாக்கி இருக்கிறார்.

37
சொத்து விற்ற பணம்

தொடர்ந்து பேசிய ஸ்வாகதா, ஒரு முறை சொத்து விற்ற பணம் என்னிடம் இருக்கிறது என அவரிடம் நான் சொன்னபோது, அந்த பணத்தை வட்டியுடன் திருப்பி தருவதாக கூறி என்னிடம் பல காரணங்கள் சொல்லி வாங்கினார். அதை வைத்து வீடு, சொகுசு கார் போன்றவற்றை வாங்கி அனுபவித்தார். அவரது மனைவிக்கு ஐபோன் வாங்க காசு கொடுத்தது கூட நான் தான். இதற்க்கு பலனாக அவர் நான் பாட சில பாடல்களும் கொடுத்தார். இதை எல்லாம் அவரது குடும்பமும் சேர்ந்து தான் செய்தார்கள்.

47
சீக்ரெட் கேமரா

7 வருடத்திற்கு முன் திடீரென் ஒரு நாள் ஸ்டூடியோவிலேயே என்னை பலவந்தப்படுத்தி தவறாக நடந்து கொண்டார். அதை சிசிடிவி கேமராவில் ரெக்கார்டு செய்து வைத்து கொண்டு, இதை யாரிடமும் வெளியே சொல்ல கூடாது என சிசிடிவி ரெக்கார்டை வைத்து கொண்டு எல்லோருக்கும் காட்டிவிடுவேன் என மிரட்டினார். சவுண்ட் ப்ரூஃப் ரூமில் அது நடந்தது. பல சீக்ரெட் கேமரா வைத்து இருந்தார். என்னைப்பற்றி தவறாக தகவல் பரப்பினார். அவரது மனைவியையும் இவருடன் சேர்ந்து என்னை ஏமாற்றினார்.

57
கருவை கலைத்துள்ளார்:

இது போல பல பெண்களை வீடியோ எடுத்து அவர் பார்த்து கொண்டிருப்பார். குழந்தைகளையும் பார்த்துக்கொண்டிருப்பார். அமெரிக்காவில் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் பற்றி பேசுகிறார்கள். அதற்கெல்லாம் ராஜா மெட்ராஸ் தான் இருக்கிறார். கோடிகளில் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால், நான் சவுண்ட் கார்டு திருடிவிட்டேன் என பொய்யாக குற்றம் சாட்டுகிறார். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்க எனக்கு தைரியம் இல்லை. ஒரு பெண் இவரால் கர்ப்பமாகி கருவை கலைத்துள்ளார். இதை அந்த பெண்ணே எனக்கு மெஸேஜ் மூலம் தெரிவித்தார். இதற்கெல்லாம் அவரது மனைவியும் உடந்தையாக இருக்கிறார்.

67
காப்பாற்றியவர் என் சகோதரி மாயா

இப்படி ஒருவனுக்கு அவார்டுகள் கொடுக்கிறார்கள். மற்றவர்கள் வேலைக்கு அவர் விருது வாங்குகிறார். அவருக்கு பியானோ கூட வாசிக்க தெரியாது. பின்னர் என் வீட்டில் வந்து இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என காலில் விழுந்து கதறினார். இந்த சூழ்நிலையில் எனக்கு பக்கபலமாக இருந்து என்னை காப்பாற்றியவர் என் சகோதரி மாயா தான்.

77
குற்றவாளி யார்?

இந்த பேட்டியில், ஜிவி பிரகாஷ், ஜிப்ரான், அனிருத், இமான் போன்ற இசையமைப்பாளர்கள் வேற லெவலில் ப்ரொஃபஷ்னல் ஆக இருப்பவர்கள் என ஸ்வாகதா கூறியுள்ளார். அதனால் இந்த லிஸ்டில் இருப்பவர்கள் குற்றவாளி இல்லை என்பது தெளிவாக தெரிந்தாலும், அந்த முக்கிய குற்றவாளி யார் என்பது தான் ரசிகர்கள் பலரின் கேள்வியாக மாறியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories