வல்லரசு நாடுகளாலேயே கொரோனா வைரஸை கட்டு படுத்த முடியாமல் திணறி வரும் நிலையில், தமிழக அரசு கொரோனாவை கட்டு படுத்தவும், அதனால் பாதிக்கப்படுபவர்களை குணப்படுத்தி மீட்டு கொண்டு வருவதிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
undefined
அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையிலும், மக்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியம். முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தால் கோரோனோ எளிதில் மக்களை தாக்குகிறது.
undefined
மக்களை கொரோனாவில் இருந்து மீட்க, தினமும் இரவு, பகல், பாராமல் மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என தூக்கம் இன்றி பாடுபட்டு வரும் நிலையில், தன்னை முதலமைச்சர் ஆக்கும் படி பிரதமர் மோடிக்கு மீரா மிதுன் ட்விட் செய்து டாக் செய்துள்ளதால் நெட்டிசன்கள் வழக்கம் போல் மீரா மிதுனை வச்சி செய்து வருகிறார்கள்.
undefined
குறிப்பாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்வதோடு தன்னை முதல்வர் ஆக்குங்கள் ஒரே வாரத்தில் நிலைமையை சரி செய்கிறேன் என்றும் சவால் விட்டுள்ளார்
undefined
தமிழக அரசு கையாலாகாத அரசு என்றும் உடனடியாக பிரதமர் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், தன்னை தமிழக முதல்வராக ஆக்கினால் ஒரே வாரத்தில் நிலைமையை சரி செய்து இயல்பு நிலைக்குக் கொண்டு வருவேன் என்று மீரா கூறியுள்ளார்.
undefined
ஒரே மாதத்தில் கிரிமினல்கள் அனைவரையும் ஜெயிலுக்குள் தள்ளுவேன் என்றும், மூன்றே மாதத்தில் தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என்று ஆறு மாதத்தில் இந்திய பொருளாதாரத்தையே மேம்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
undefined
முதல்வர் பணியை, திரைப்படம் போல் எண்ணி மீரா மிதுன் பேசுகிறார் என்றும், பாவம் அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா என இவர் போட்டுள்ள ட்விட்டருக்கு கதறவிட்டு வருகிறார்கள்.
undefined