மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆனது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வனை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுத்திருந்தார் மணிரத்னம். இப்படம் ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் மழை பொழிந்தது.