இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார் பிரசாந்த் நீல். இதில் யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், சரண், ஈஸ்வரி ராவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகி இருந்த இப்படம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியானது.