Keerthy Suresh மரைக்கார் நாயகியாக கையில் வாளுடன் இருக்கும் வீரமங்கை கீர்த்தி சுரேஷ்...

First Published Dec 2, 2021, 10:07 AM IST

Keerthy Suresh மரைக்காயர் காஸ்டியூமில் கையில் வாளை பிடித்தபடி கெத்தாக கீர்த்தி சுரேஷ் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Keerthy suresh

பன்மொழிப்படங்களில் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் தனது அழகிய புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

Keerthy suresh

 2013ல் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Keerthy suresh

தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நாயகியாக ஜொலிக்கும் கீர்த்தி, பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். அதோடு தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார்.  

Keerthy suresh

 எட்டு வருடங்களுக்கு பிறகு மோகன்லால் நடிக்கும் 'மரைக்கார் ;அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தில் மீண்டும் அவரது இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். 

Keerthy suresh

 மரைக்காயர் படத்தில் கீர்த்தி சுரேஷின்  சிறுவயது தோழர்களான பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், ஆகியோரும் நடித்துள்ளார்கள்..

Keerthy suresh

இன்று  திரைக்கண்டுள்ள மரைக்காயர்   படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா என்கிற இளவரசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

Keerthy suresh

மரைக்காயர்  இந்தப்படம் பதினாறாம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால் கீர்த்தி சுரேஷின் உருவத்திற்கு யாரை மாடலாக எடுக்கலாம் என்கிற கேள்வி எழுந்தது.

Keerthy suresh

பின்னர் மரைக்காயர்   ஆர்ச்சா என்கிற இளவரசி  தோற்றத்திற்காக  வேறு எங்கும் தேடாமல் ரவிவர்மனின் ஓவியங்களில் இருந்தே கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை வடிவமைத்துள்ளார்கள்.

Keerthy suresh

ரவி வர்மாவின் ஓவியமாக மாறிய மரைக்காயர் இளவரசி கீர்த்தி சுரேஷ் தனது அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். 

Keerthy suresh

ஆலமரத்திற்கு இடையே அமர்ந்திருக்கும் வீர மங்கை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் கவரப்பட்ட புகைப்படமாக வைரலாகி வருகிறது.

click me!