சித்ராவை தொடர்ந்து மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிக்பாஸ் நடிகை!

First Published Jan 25, 2021, 5:14 PM IST

கன்னடம் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட, நடிகை ஜெயஸ்ரீ ராமையா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது, திரையுலகினர் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் பிரபலங்கள் பலரும், பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்களின் மனதில் இடம்பிடித்து திரைத்துறை வாய்ப்புகளை கைப்பற்ற நினைக்கின்றனர்.
undefined
அந்த வகையில் கடந்த ஆண்டு நடந்த கன்னடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு விளையாடுவர் ஜெயஸ்ரீ ராமையா.
undefined
இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைத்தும், இவருக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
undefined
இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த ஜெயஸ்ரீ ராமைய்யா, அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
undefined
அதே நேரம், தற்கொலை குறித்து அவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டதை பார்த்து, கன்னட நடிகர் சுதீப் சமாதானம் செய்து, தற்கொலை உணர்வில் இருந்து வெளிக்கொண்டு வர உதவியுள்ளார்.
undefined
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் இருந்து தன்னை தனிமை படுத்தி கொண்டு, ஆசிரமம் ஒன்றில் வசித்து வந்துள்ளார் ஜெயஸ்ரீ.
undefined
குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பல முறை போன் செய்த போதிலும், அதனை ஜெயஸ்ரீ எடுக்காததால், ஆசிரமத்திற்கு போன் செய்து விசாரித்துள்ளனர்.
undefined
பின்னர் ஜெயஸ்ரீ தங்கி இருந்த, அறையை சோதனையிட்ட போது அங்கு அவர் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.
undefined
சமீபத்தில் தான் மன அழுத்தம் காரணமாக நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரை தொடர்ந்து மற்றொரு இளம் நடிகை தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
undefined
click me!