'தலைவி' பட நாயகி கங்கனாவுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு..! அதிரடியாக உத்தரவு போட்ட உள்துறை அமைச்சகம்!

First Published Sep 7, 2020, 7:26 PM IST

நடிகை கங்கனா ரணாவத், சுஷாந்த் தற்கொலைக்கு பின் பாலிவுட் திரையுலகில் வாரிசு ரசிகர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
 

இதை தொடர்ந்து இவருடைய வீட்டில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
undefined
தற்போது இமாச்சல பிரதேசத்தில் வசித்து வரும் இவர், மும்பைக்கு வருகிற 9ம் தேதி தான் வரபோவதாகவும், துணிச்சல் இருந்தால் தடுத்து பாருங்கள் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு சவால் விடுவது போல் கூறினார்.
undefined
கங்கனா மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மாறியுள்ளதாக கூறியதற்கு சஞ்சய் ராவத் எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறி இருந்தார்.
undefined
அதாவது இங்கு வர பயமாக இருந்தால் மும்பைக்கு வர வேண்டாம் என தெரிவித்தார்.
undefined
இதற்கும் கங்கனா காரம் சாரமாக பதில் அளித்தார்.
undefined
இதனால் சிவசேனா தொண்டர்கள் தன்னை தொடர்ந்து மிரட்டினாலும், 9ம் தேதி நிச்சயம் மும்பைக்கு வருவேன் எனவும் குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார் கங்கனா
undefined
இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனாவின் வீட்டுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
undefined
இதற்க்கு கங்கானாவும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.
undefined
click me!