அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் திருமணத்தை நிறுத்த கையை அறுத்துக் கொண்ட ஜான்வி கபூர்! ஆனா..

First Published Aug 23, 2024, 9:55 AM IST

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் 2007 இல் திருமணம் செய்து கொண்டனர், ஆனால் அவர்களது பயணம் எளிதானது அல்ல. ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் திருமணத்தை தடுத்து நிறுத்த ஒரு பெண் தனது கையை அறுத்துக் கொண்டார்.

Abhishek Bachchan, Aishwarya Rai

பாலிவுட்டின் பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் பச்சன் தம்பதியும் ஒன்று. இந்த ஜோடி விவாகரத்து செய்யப் போவதாக அவ்வப்போது வதந்திகள் பரவி வருகின்றன. அந்த வகையில் தற்போது இதுபோன்ற ஒரு வதந்தி பரவி வருகிறது.

Abhishek Bachchan, Aishwarya Rai

இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அபிஷேக் பச்சன் சமீபத்தில் விவாகரத்து வதந்திகளை நிராகரித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் திருமணத்தில் நடந்த ஒரு சர்ச்சைக்குரிய பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Videos


Abhishek Bachchan, Aishwarya Rai

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் 2007 இல் திருமணம் செய்துகொண்டனர், ஆனால் அவர்களது பயணம் எளிதானது அல்ல. ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் திருமணத்தை தடுத்து நிறுத்த ஒரு பெண் தனது கையை அறுத்துக் கொண்டார்.

Abhishek Bachchan, Aishwarya Rai

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் அவரது இல்லமான பிரதீக்ஷாவில் திருமணம் செய்து கொண்டனர். திருமண, கொண்டாட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது, ​​பச்சன் வீட்டிற்கு வெளியே பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஜான்வி கபூர், ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூர் அல்ல.ஜான்வி கபூர் என்ற மாடல், அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Abhishek Bachchan, Aishwarya Rai

இந்த அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் அதோடு நிற்கவில்லை. ஜான்வி கபூர் அபிஷேக் பச்சனுக்கு எதிராக ஜூஹூ காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய முயன்றார், ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அது பதிவு செய்யப்படவில்லை.

Abhishek Bachchan, Aishwarya Rai

'தஸ்' என்ற படத்தில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து பணியாற்றிய ஜான்வி கபூர் செய்த மலிவான விளம்பரம் யுத்தி என்று பலர் கூறினர். எனினும் அபிஷேக் பச்சன் தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துவிட்டார். இதை அறிந்ததும் மற்றொரு அதிர்ச்சி முடிவை எடுத்தார் ஜான்வி கபூர். அபிஷேக் பச்சன் மீதான காதலை நிரூபிக்க மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் ஜான்வி கபூர். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Abhishek Bachchan, Aishwarya Rai

ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது கணவரை தன்னிடமிருந்து திருடிவிட்டதாக அவர் தொடர்ந்து குற்றம் சாட்டினார். ஜான்வி கபூர் உடல்நிலை தேறிய உடன், ஜூஹு காவல் நிலையத்தில் ஜான்வி மீது IPCயின் பிரிவு 309 இன் கீழ் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Abhishek Bachchan, Aishwarya Rai

ஜான்வி கபூர் 10000 ரூபாய் செலுத்திய பிறகு காவலில் இருந்து விரைவில் விடுவிக்கப்பட்டார். அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் திருமணத்திற்குப் பிறகு, ஜான்வி கபூர் மீண்டும் அவர்களின் வீட்டிற்கு வெளியே காணப்படவில்லை. மேலும் அவர் ஊடகங்களில் எந்த அறிக்கையும் வெளியிடவும் இல்லை.

click me!