முந்தானை முடிச்சு இசையமைக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போனதால் கங்கை அமரனுக்கு மூன்று பாடல்களை எழுத வாய்ப்பளித்தார் பாக்யராஜ். அப்படி அப்படத்தில் இடம்பெற்ற விளக்கு வச்ச நேரத்துல பாட்டுக்கு முதலில் வேறு வரிகள் இருக்க, அதை இளையராஜா பாடி ரெக்கார்ட் செய்து கொண்டிருந்த சமயத்தில் பாக்கியராஜ் சில மாற்றைங்களை செய்துகொண்டு இதைப் பாடுங்கள் என சொல்லி இருக்கிறார்.
அந்தபாட்டில், ‘விளக்கு வச்ச நேரத்துல, மாமன் வந்தான்; மறைஞ்சு நின்னு பார்க்கையில தாகம் என்றான். நான் குடுக்க, அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற’ என பாடல் வரிகள் இடம்பெற்றதை பார்த்து ஷாக் ஆன இளையராஜா, என்ன இது இவ்வளவு செக்ஸியா பாடல் வரிகளை எழுதியிருக்கிறீர்கள். இதையெல்லாம் நான் பாடமாட்டேன் என சொல்லிவிட்டாராம் இளையராஜா. பின்னர் இருவரும் வாக்குவாதம் செய்ய, பாடகி ஜானகி இருவரையும் சமாதானம் செய்து வைத்து இளையராஜாவை பாட வைத்திருக்கிறார்.
இளையராஜா, அந்த பாடலை பாடும்போது, விளக்கு வச்ச நேரத்துல தன்னா... நா.. நா, மறைஞ்சு நின்னு பார்க்கையில தன்னா... நா.. நா என பாடி இருக்கிறார். இதைக்கேட்டதும் பாட்டை நிறுத்திய பாக்யராஜ், நான் எழுதின வரியை படித்திருந்தால் ஒரு அர்த்தம் தான் புரிந்திருக்கும். ஆனால் நீங்கள் இப்படி பாடியதைக் கேட்டால் அவர்களுக்கு பல அர்த்தங்கள் புரியும் என சொல்லிவிட, இளையராஜாவும் சந்தோஷமாகி அந்த பாடலை பாடி முடித்திருக்கிறார்.