பூஜா ஹெக்டே தனது ட்வீட்டர் பக்கத்தில், 'தான் மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்த போது, அதன் விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரது திமிர் பிடித்த மற்றும் அச்சுறுத்தும் செயல்பாட்டால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதோடு இது போன்ற பதிவுகளை வெளியிடுவதில்லை ஆனால், இது மிகவும் பயங்கரமானது ' என பதிவிட்டுள்ளார்.