கதை சுத்தமா பிடிக்கல; மனசே இல்லாமல் இளையராஜா இசையமைத்து மெகா ஹிட்டான சிவாஜி படம்!
Ansgar R |
Published : Oct 21, 2024, 04:45 PM ISTUpdated : Oct 21, 2024, 04:54 PM IST
Music Director Ilayaraja : இசைஞானி இளையராஜா, கதை பிடிக்காமல் ஒரு படத்திற்கு இசையமைத்து, அந்த திரைப்படம் மெகா ஹிட் திரைப்படமாக மாறியது குறித்து சில வருடங்களுக்கு முன்பு மனம் திறந்து பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை எம்.எஸ் விஸ்வநாதன் காலத்திற்கு பிறகு, இன்றளவும் சுமார் 48 ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் இளையராஜா. அவருடைய அறிமுகத்திற்கு பின்பு, இப்போது வரை தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்கள் இசையமைத்து வந்தாலும், இளையராஜாவின் இசைக்கு என்று ஒரு தனி வரவேற்பு எப்போதும் இருந்து வருகிறது. அவர் தலைகனம் மிக்கவர் என்று சிலர் கூறினாலும். அவ்வளவு திறன் கொண்ட ஒரு மனிதன், இப்படி தலைகணத்தோடு இருப்பதில் எந்த விதமான தவறுகளும் இல்லை என்பது தான் அவருடைய ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகின்றது. தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால், அதை முகத்துக்கு நேரே "எனக்கு பிடிக்கவில்லை" என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய தைரியம் இளையராஜாவிடம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் இளையராஜா, திரை உலகில் அறிமுகமாகி உச்ச இசையமைப்பாளராக பயணித்து வந்த காலத்தில், பிரபல இயக்குனர் ஒருவருடைய திரைப்படத்தில் இசையமைக்க அவர் ஒப்பந்தமாகிறார். பொதுவாக இசையமைப்பதற்கு முன் அப்படத்தின் கதையை கேட்கும் வழக்கம் இளையராஜாவிடம் உண்டு. அப்படி அந்த பிரபல இயக்குனர் கூறிய கதையை கேட்டதும், இளையராஜாவிற்கு சுத்தமாக கதை பிடிக்கவில்லையாம். அரை மனதோடு தான் அந்த திரைப்படத்தில் இசையமைக்கவே ஒத்துக் கொண்டுள்ளார்.
ஆனால் தன்னுடைய தொழில் மீது கொண்ட பக்தியின் காரணமாக, எந்தவித மறுப்பும் சொல்லாமல் அந்த முழு திரைப்படத்திற்கும் திறன்பட இசையமைத்து முடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் சிறியதும் பெரியதுமாய் மொத்தம் ஒன்பது பாடல்கள். ஆனால் இந்த ஒன்பது பாடல்களையும் ஒரே பாடகர், இரண்டே இரண்டு பாடகிகளை வைத்து ஒட்டுமொத்த திரைப்படத்தையும் முடித்திருப்பார் இளையராஜா.
34
Muthal Mariyathai
தனிப்பட்ட முறையில் இளையராஜாவிற்கு அந்த கதை பிடிக்கவில்லை என்றாலும், அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் திறம்பட அமைத்திருந்தார். அந்த திரைப்படம் தான் கடந்த 1985ம் ஆண்டு தமிழ் சினிமாவின் "நடிகர் திலகமாய்" திகழ்ந்த சிவாஜி கணேசனின் நடிப்பில், பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான "முதல் மரியாதை" என்கின்ற மெகா ஹிட் திரைப்படம். இந்த திரைப்படத்தில் ஒலித்த அனைத்து பாடல்களுக்கும் மலேசியா வாசுதேவன் தான் குரல் கொடுத்தார். அவரோடு இணைந்து எஸ்.ஜானகி மற்றும் கே.எஸ் சித்ரா இந்த திரைப்படத்தில் வரும் பாடல்களை பாடி இருந்தனர்.
என்னுடைய கதை பிடிக்கவில்லை என்று சொன்னாய், ஆனால் பாடல்களை ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக வந்திருக்கிறது என்று இளையராஜாவை ஆரத்தழுவி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தாராம் பாரதிராஜா.
44
bharathi raja
கடந்த 1977 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "16 வயதினிலே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் பாரதிராஜா இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்காக அவருக்கு தமிழக அரசு வழங்கும் மாநில விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே இளையராஜாவின் இசையோடு அறிமுகமானவர் பாரதிராஜா. தொடர்ச்சியாக அவருடைய இயக்கத்தில் வெளியான "கிழக்கே போகும் ரயில்", "சிவப்பு ரோஜாக்கள்", "புதிய வார்ப்புகள்", "நிறம் மாறாத பூக்கள்" என்று பல திரைப்படங்களுக்கு இசையமைத்தது இளையராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.