என் பரம்பரையிலேயே நான் தான் முதல் முறையாக இதை செய்திருக்கேன்... ஆனந்த கண்ணீர் வடித்த ஜிபி முத்து...!

First Published Apr 14, 2021, 6:28 PM IST

'டிக் டாக்' செயலி மூலம் பிரபலமான, பலர் நடிகர் - நடிகைகளாக அவதாரம் எடுத்து வரும் நிலையில்,  ஜி.பி.முத்து பல்வேறு விமர்சனங்களை தாண்டி, தற்போது ஒரு காமெடி நிகழ்ச்சியில் தோன்றி, ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். இவர் தற்போது கார் வாங்கியுள்ள தகவல், வெளியாகியுள்ளது. என்னதான் இவர் மீது சிலருக்கு கடுப்பு இருந்தாலும், தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடியைச் சேர்ந்தவர் ஜி.பி.முத்து, டிக்-டாக் மூலம் பிரபலமான இவர், 'டிக் டாக்' செயலி மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யாவுடன் ரொமான்டிக் பாடல்களை பாடி பிரபலமானவர்.
undefined
ஜி.பி.முத்துவின் டிக்டாக் வீடியோக்களை கலாய்ப்பதற்கு என்று சோசியல் மீடியாவில் பல குரூப் உலவிக்கொண்டிருந்தது. இதனால் கடுப்பான ஜி.பி.முத்துவும் அவர்களை வாயிற்கு வந்த வார்த்தையால் திட்டி பதிவிடும் வீடியோக்களும் வைரலாகி விடும்.
undefined
டிக்டாக் தடையால் மிகவும் மனம் உடைந்த அவர், பிரதமர் மோடிக்கெல்லாம் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டார். டிக்டாக் தடை காரணமாக தற்போது முகநூல் பக்கங்களில் தொடர்ந்து தன்னுடைய வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
undefined
பழைய மர பொருட்களை பழுது பார்க்கும் வேலை செய்து வரும், இவர் சமீபத்தில் கொரோனா பிரச்சனை காரணமாக தொழில் நஷ்டமடைந்ததாலும், தந்தையுடன் ஏற்பட்ட மன கஷ்டம் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்ள முயன்று, தீவிர சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டு வந்தார்.
undefined
அவ்வப்போது... இவருடைய ரசிகர்கள் பல்வேறு பரிசுகளை இவருக்கு அனுப்ப, அதனை வீடியோ வெளியிட்டு வருகிறார் ஜி.பி.முத்து. இதனை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சில நல்ல விதமான பரிசு பொருட்களை அனுப்பினாலும், ஒரு சிலர் இவரிடம் வம்பிக்கவேண்டும் என்பதற்காகவே... எடக்கு மடக்கான பொருட்களை அனுப்புவதும் உண்டு.
undefined
இவருக்கு என்னதான் நெகடிவ் இமேஜ் உருவானாலும், அவை அனைத்தையும் மறக்கடிக்கும் விதமாக, தற்போது பிரபல தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். எப்போதும் போல் எதார்த்தமாக இவர் பேசுவது இந்த நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்களை பெற்று தந்துள்ளது.
undefined
ஜிபி முத்துவின் வாழ்க்கையில் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்பு முனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜி.பி.முத்து செகண்ட் ஹாண்டில் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்து வர வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னுடைய பரம்பரையில் முதல் முதலாக கார் வாங்குவது நான் தான் என ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார். இதற்க்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
undefined
click me!