பிக்பாஸ் தன்னுடைய வேலையை காட்டும் விதத்தில், இந்த வீடியோவை வெளியிட்டு சுரேஷுக்கே ஷாக் கொடுத்தார். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில், சுரேஷை ஹீரோ என அவரை தூக்கி பிடித்த கமல், இரண்டாவது புரோமோவில் சுரேஷ் கூறிய குரூப்பிஸம் பிக்பாஸ் வீட்டில் உள்ளதை உறுதி செய்துள்ளார்.
undefined
இன்றைய முதல் புரமோவில் அட்டகாசமான கெட்டப் உடன் தோன்றிய கமல்ஹாசன், ’ஆளாளுக்கு ஒரு குரூப்பில் சேர்த்துக் கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உருவாகி இருக்கின்றது.
undefined
இந்த 16 போட்டியாளர்களை சேர சோழ பாண்டியர்கள் என்று பிரித்தோம் என்றால் அதில் ரேகா மற்றும் சனம் ஆகிய இருவரையும் பாண்டியன் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் மீன் கொடியை அப்படி தூக்கிப் பிடிக்கிறார்கள். பாண்டியர்கள் கொடியிலும் இரண்டு மீன்கள் இருக்கும்’ என்று கூறி ட்விஸ்ட் வைத்துள்ளார்.
undefined
மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உள்ளதை கமல்ஹாசன் ஒப்புக்கொண்ட நிலையில், இந்த மீன் கதை கூற காரணம் என்ன என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.
undefined