இந்நிலையில், நடிகர் கவுதம் கார்த்திக் பேட்டி ஒன்றில் தன் அம்மாவும், அப்பாவும் பிரிந்தது குறித்து மனம்திறந்து பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது : அப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணியதால் அம்மாவும், அப்பாவும் பிரிஞ்சிட்டாங்க. இருவருமே பிரிந்த பிறகு நான் தான் தனிமையில் வாடினேன். அப்பா சென்னையில் இருந்ததால், நான் அம்மாவுடன் இருந்தான் இருந்தேன்.
வருஷத்துக்கு ரெண்டு தடவ மட்டும் அப்பாகிட்ட இருந்து போன் வரும், அதேபோல் எப்பயாச்சும் தான் பார்க்கவே வருவார். அந்த சமயத்தில் என்னை அருகில் இருந்து வளர்த்தது என் அம்மா தான். சிங்கிள் மதராக இருந்து இரண்டு பசங்களை வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. பல்வேறு பிரச்சனைகள் வந்தாலும் அதையும் மீறி என்னையும், என் தம்பியையும் வளர்த்தார்கள். நான் தனிமையில் வாடிய போது என்னுடைய ஃபிரெண்ட்ஸ் தான் என்னுடனே இருந்தாங்க” என எமோஷனலாக பேசி உள்ளார் கவுதம் கார்த்திக்.
இதையும் படியுங்கள்... அப்பா - அம்மாவுக்கு 60-ஆம் கல்யாணம் செய்து அழகு பார்த்த விஜய் டிவி KPY பாலா! வைரலாகும் வீடியோ..!