உற்பத்திக் கோளாறு என்று டீலர் கூறியதால், கீர்த்தி சிங் நீதிமன்றத்தை அணுகினார். மனுவை விசாரித்த நீதிமன்றம், மதுரா போலீசாருக்கு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, மதுரா போலீசார், பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஹூண்டாய் இந்தியா மேலாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எந்தவொரு பொருளைப் பற்றியும் தவறான தகவல் அல்லது பொய்யான தகவலை பரப்பக்கூடாது. பொருளின் பிராண்ட் அம்பாசிடரும் விளம்பரப்படுத்துவதற்கு முன்பு அனைத்தையும் சரிபார்க்க வேண்டும். பொருள் அல்லது நிறுவனம் பொய் சொன்னாலும், விளம்பரப்படுத்தும் அம்பாசிடரும் பொறுப்பேற்க வேண்டும். இந்த அம்பாசிடரின் முகத்தைப் பார்த்து பலர் பொருளை அல்லது சேவையைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, அம்பாசிடரும் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.