சூப்பர்ஸ்டாருக்கு வாழ்த்து சொல்ல... கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த ரஜினிகாந்த்

First Published Dec 12, 2022, 11:47 AM IST

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்வதற்காக அவரது ரசிகர்கள் ஏராளமானோர் சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் முன்பு குவிந்து இருந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் நடிகர் ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவரது ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்வதற்காக அவரது ரசிகர்கள் ஏராளமானோர் சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் முன்பு குவிந்து இருந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கையில் கிப்ட் உடன் தலைவா.. தலைவா என கோஷமிட்டவாரு காத்திருந்தனர்.

இதையும் படியுங்கள்... நடிச்சது ஒரே ஒரு விளம்பரம்.. அதன்பின் கோடி ரூபாய் கொடுத்தாலும் ரஜினிகாந்த் விளம்பரங்களில் நடிக்க மறுப்பது ஏன்?

ரசிகர்கள் கூட்டம் அதிகமானதை அடுத்து, வீட்டிற்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், அவர் ஊரில் இல்லை என்பதை கூறியதோடு, தயவுசெய்து ரசிகர்கள் யாரும் கொட்டும் மழையில் காத்திருக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ரஜினியின் சார்பாக வந்திருந்த எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக லதா கூறினார்.

ரஜினி ஊரில் இல்லை என லதா ரஜினிகாந்த் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், தலைவரை பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தத்தோடு அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் ரஜினிகாந்த் வெளியூர் சென்றுள்ளாரா அல்லது வெளிமாநிலம் சென்றுள்ளாரா என்கிற தகவலை லதா ரஜினிகாந்த் வெளியிடவில்லை.

இதையும் படியுங்கள்... ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்பட்ட ரஜினிக்கு தாயுமானவனாக இருந்த உடுப்பிகாரர்! சூப்பர்ஸ்டாரின் அறியப்படாத மறுபக்கம்

click me!