நடிகர் ரஜினிகாந்த்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் நடிகர் ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவரது ரசிகர்கள் செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் கூட்டம் அதிகமானதை அடுத்து, வீட்டிற்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், அவர் ஊரில் இல்லை என்பதை கூறியதோடு, தயவுசெய்து ரசிகர்கள் யாரும் கொட்டும் மழையில் காத்திருக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ரஜினியின் சார்பாக வந்திருந்த எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக லதா கூறினார்.