அஜித் - ஷாலினி காதலுக்கு உதவிய பிரபல நடிகர்..! இந்த AK 47 ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

First Published Aug 12, 2020, 7:34 PM IST

தமிழ் சினிமாவில் பலருக்கு பிடித்த ஃபேவரைட் நட்சத்திர ஜோடிகளாக அஜித் - ஷாலினி உள்ளனர் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 

அமர்க்களம் கடத்தின் மூலம் அருமையாக ஆரபமாகி இருந்தாலும், இவர்களும் குடும்பத்தினரால் ஒரு வந்த சில பிரச்சனைகளை கடந்து தான் திருமணம் செய்து கொண்டனர்.
undefined
நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான அஜித், ஷாலினி காதலுக்கு பிரபல நடிகர் ஒருவரும் ஏகே 47ம், உதவியாக இருந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
undefined
அஜித் மற்றும் ஷாலினி இயக்குனர் சரண் இயக்கிய ’அமர்க்களம்’ படத்தில் நடித்து கொண்டிருந்த போது காதலித்தார்கள் என்பதும் அதன் பின்னர் இருதரப்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் அனைவரும் தெரிந்ததே
undefined
இந்த நிலையில் அஜித் மற்றும் ஷாலினி காதலித்துக் கொண்டிருந்த போது இருவரும் வெவ்வேறு படப்பிடிப்பில் இருந்தபோது மொபைல் போன் மூலம் பேசிக் கொண்டதாகவும், அவ்வாறு பேசுவதற்கு 90களின் பிரபல மலையாள நடிகர் ஒருவர் உதவியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
undefined
பிரபல மலையாள நடிகர் குஞ்சாகோ பூபன் என்பவர் அஜித் - ஷாலினி காதலித்து வந்த போது, ஷாலினியுடன் ’நிறம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
undefined
அப்போது ஷாலினியிடம் செல்போன் இல்லாததால் அஜித், குஞ்சாகோவுக்கு போன் செய்து போனை ஷாலினியிடம் கொடுக்க செல்வார் என்றும் ஷாலினியிடம் மொபைல் போனை கொடுக்கும்போது அவர் ‘ஏகே 47 இஸ் காலிங்’ என்று மறைமுகமாகக் அஜித் பேசுவதை குறிப்பிடுவார் என்றும் அதனைப் புரிந்துகொண்டு ஷாலினி மொபைல் போனை வாங்கி கொண்டு தனியாக அஜித்துடன் மொபைல் போனில் பேசிக் கொண்டிருப்பார் என்றும் குஞ்சாகோ தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
undefined
இதனை ஒரு நாள் கண்டு பிடித்துவிட்ட ’நிறம்’ இயக்குநர் கமல், ஒரு நாள் ஷாலினியிடம், ‘இன்று ஏகே 47 பேசவில்லையா? என்று கேட்டதாகவும் ஷாலினி அப்போது அதைக் கேட்டு ஆச்சரியமடைந்ததாகவும் குஞ்சாகோ தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்
undefined
அஜித், ஷாலினி காதலுக்கு ஏகே 47 மற்றும் பிரபல நடிகர் ஒருவரும் உதவியாக இருந்த தகவல் தற்போது இந்த சமூக வலைதள பதிவில் இருந்து தெரியவந்துள்ளது
undefined
click me!