ரசிகர்கள் செய்வதறியாது நின்ற நிலையில் காவல்துறையினர், பட தயாரிப்பு நிறுவனத்தை அணுகிய போது, அரங்கம் முழுமையாக நிரம்பிவிட்டது என்றும் இனி யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கூறிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே ரசிகர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர். ஒரு சிலரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர். அதே நேரம் ரசிகர்கள் கையில் டிக்கெட்டுடன் வாதித்ததால், போலி டிக்கெட் மூலம் சிலர் உள்ளே சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமானின், மியூசிக் கான்செர்ட் சென்னையில் நடந்த போது... இதே போன்ற போலி டிக்கெட் சர்ச்சை எழுந்தது தொடர்ந்து மீண்டும் ரஜினி படத்திற்கு போலி டிக்கெட் பிரச்சனையால் பல ரசிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.