எதிர்நீச்சல் தந்த மவுசு... ஜெயிலர், கங்குவா என சினிமாவிலும் கலக்கும் மாரிமுத்து இத்தனை படங்களை இயக்கி உள்ளாரா?

Published : Jul 25, 2023, 12:59 PM ISTUpdated : Jul 25, 2023, 01:00 PM IST

எதிர்நீச்சல் சீரியலில் வில்லத்தனமான வேடத்தில் நடித்து வரும் மாரிமுத்து, தமிழில் சில திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
எதிர்நீச்சல் தந்த மவுசு... ஜெயிலர், கங்குவா என சினிமாவிலும் கலக்கும் மாரிமுத்து இத்தனை படங்களை இயக்கி உள்ளாரா?
Ethirneechal Marimuthu

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பது தான் ஆசையாம். இதற்கு குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 1990-ம் ஆண்டு சினிமா ஆசையில் சென்னைக்கு ஓடி வந்துவிட்டாராம் மாரிமுத்து. இதையடுத்து ராஜ்கரணிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அவர், அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தார்.

25
SJ Suryah, Marimuthu

பின்னர் மணிரத்னம், வஸந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா போன்றவர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்துவின் இயக்குனர் கனவு கடந்த 2008-ம் ஆண்டு நனவானது. அவர் தமிழில் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் கண்ணும் கண்ணும். இப்படத்தில் பிரசன்னா நாயகனாக நடித்திருந்தார். வித்தியாசமான காதல் கதையை படமாக்கி இருந்தார் மாரிமுத்து. இப்படம் பெரியளவில் வெற்றியடைய வில்லை என்றாலும், அதில் இடம்பெற்ற பாடல்கள் வேறலெவல் ஹிட் அடித்தன.

35

குறிப்பாக தீனா இசையில் சுசித்ரா பாடிய 18 வயசு பட்டாம்பூச்சு என்கிற பாடல் அந்த சமயத்தில் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய பாடல்களில் ஒன்றாக இருந்தது. அதோடு இப்படத்தில் தான் வடிவேலுவின் ஐகானிக் காமெடியான கிணத்தை காணோம் என போலீசில் புகார் கொடுக்கும் காமெடி காட்சியும் இடம்பெற்று இருந்தது. இந்த காமெடி காட்சிகளெல்லாம் இன்றளவும் ரசிக்கப்படுகிறது என்றால் அதற்கு காரணம் அப்படத்தின் இயக்குனரான மாரிமுத்து தான்.

இதையும் படியுங்கள்... இன்ஜினியரிங் படிச்சேன்... வறுமையால் ஹோட்டல்ல வேலை பார்த்தேன் - எதிர்நீச்சல் மாரிமுத்துவின் மறுபக்கம்

45

இதையடுத்து புலிவால் என்கிற திரைப்படத்தை இயக்கினார் மாரிமுத்து. இதில் விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, சூரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படமும் தோல்வி அடைந்ததால் படம் இயக்குவதை நிறுத்திவிட்டு முழுநேர நடிகராகிவிட்டார் மாரிமுத்து. அவருக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை முதன்முதலில் வெளியில் கொண்டு வந்தது இயக்குனர் மிஷ்கின் தான். அவர் இயக்கிய யுத்தம் செய் படம் மூலம் தான் நடிகராக அறிமுகமானார் மாரிமுத்து.

55
Ethirneechal Marimuthu

இதையடுத்து ஜீவா, கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள் உள்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தினார். அந்த படங்களின் மூலம் கிடைக்காத பெயரும், புகழும் அவருக்கு எதிர்நீச்சல் என்கிற ஒரே சீரியல் மூலம் கிடைத்துள்ளது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற செம்ம மாஸான வில்லத்தனமான வேடத்தில் நடித்து மக்கள் மனதில் ரீச் ஆகிவிட்டார் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பால் இவருக்கு சினிமாவிலும் மவுசு கூடி உள்ளது. தற்போது ரஜினியின் ஜெயிலர், சூர்யாவின் கங்குவா, கமலின் இந்தியன் 2 போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார் மாரிமுத்து.

இதையும் படியுங்கள்... உலகிலேயே 5-வது பெரிய வைரத்தை தமன்னாவுக்கு கிஃப்டாக கொடுத்த சூப்பர்ஸ்டார் குடும்பம் - காரணம் என்ன?

click me!

Recommended Stories