சுஷாந்தின் மாத செலவு மட்டும் இத்தனை லட்சமா?... பணப்பிரச்சனையால் தற்கொலையா என விசாரணை ரூட்டை மாற்றும் போலீசார்!
First Published Jun 23, 2020, 4:42 PM ISTபாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பாலிவுட்டில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது. இருப்பினும் சுஷாந்த் மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவாக தெரியாததால் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர்.
விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார் சுஷாந்தின் நண்பர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், சுஷாந்தின் முன்னாள் காதலியான ரியா சக்கரவர்த்தி உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வரிசையில் சுஷாந்தின் முன்னாள் பிசினஸ் மேனேஜரான ஸ்ருதி மோடியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடம் சுஷாந்த் சிங்கின் வரவு, செலவு குறித்து விபரங்களை கேட்டறிந்துள்ளனர்.