சுஷாந்தின் மாத செலவு மட்டும் இத்தனை லட்சமா?... பணப்பிரச்சனையால் தற்கொலையா என விசாரணை ரூட்டை மாற்றும் போலீசார்!

First Published Jun 23, 2020, 4:42 PM IST

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட்  மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பாலிவுட்டில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது. இருப்பினும் சுஷாந்த் மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவாக தெரியாததால் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர். 

விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார் சுஷாந்தின் நண்பர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், சுஷாந்தின் முன்னாள் காதலியான ரியா சக்கரவர்த்தி உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வரிசையில் சுஷாந்தின் முன்னாள் பிசினஸ் மேனேஜரான ஸ்ருதி மோடியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடம் சுஷாந்த் சிங்கின் வரவு, செலவு குறித்து விபரங்களை கேட்டறிந்துள்ளனர். 

சுஷாந்த் முன்னாள் மேனேஜர் அளித்த வாக்குமூலத்தின் படி, அவர் மாதம் 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.
undefined
சுஷாந்த் பாந்த்ராவில் வசித்து வந்த டூப்ளெக்ஸ் வீட்டின் மாத வாடகை மட்டும் 4 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் ஆகும்.
undefined
மேலும் லோனாவாலாவில் பண்ணை வீடு ஒன்றையும் வாடகைக்கு எடுத்து, அதற்கும் பல லட்சங்கள் வாடகையாக செலுத்தி வந்துள்ளார்.
undefined
சுஷாந்த் சிங் ராஜ்புட் நான்கு புராஜெட்டில் வேலை செய்து வந்துள்ளார். தனது வெர்ஷுவல் ரியாலிட்டி புரொஜெட்டிற்காக சுஷாந்த் ரெட் ரியாலிஸ்டிக் என்கிற நிறுவனத்தையும் சுஷாந்த் தொடங்கியுள்ளார்.
undefined
ஜீனியசஸ் மற்றும் டிராப் அவுட்ஸ் என்கிற சமூக ப்ராஜெக்டில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
undefined
சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு பைக், கார்கள் என்றால் பிடிக்கும். அவரிடம் ரேஞ்ச் ரோவர், மாசெராட்டி குவாட்ரபோர்ட் மற்றும் பிஎம்டபுள்யூ பைக் ஆகியவை இருந்தது.
undefined
வானியல் சம்மந்தப்பட்ட விஷயங்களை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட சுஷாந்த் சிங், நட்சத்திரங்களை கண்டு ரசிப்பதற்காக தனது வீட்டில் LX-100 என்ற டெலஸ்கோப்பை வைத்திருந்தார்.
undefined
இந்நிலையில் பண நெருக்கடியால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா? என கேள்வி எழுந்தது. இந்த கோணத்திலும் போலீசார் விசாரணையை ஆரம்பிக்க, அவரது அக்காவோ சுஷாந்திற்கு பணப்பிரச்சனை ஏதும் இல்லை? என விளக்கமளித்துள்ளார்.
undefined
click me!