வேகப்பந்துவீச்சாளராக அசத்திய அபிமன்யு மிதுன்
இந்திய அணியில் கடந்த 2010-ம் ஆண்டு விளையாடினார் அபிமன்யு மிதுன். அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது 2009ம் ஆண்டு நடந்த ரஞ்சிக் கோப்பை தொடர் தான். அதில் கர்நாடகா அணிக்காக விளையாடிய மிதுன், முதல் போட்டியிலேயே 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும். இந்த தொடர் முழுக்க சிறப்பாக ஆடிய மிதுன் மொத்தம் 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் உடனடியாக அவருக்கு இந்திய அணியில் ஆட வாய்ப்பு வந்தது.