"ஒரு மகனாக என் வீட்டிற்கு வந்த விஜய்" அன்று நடந்த சுவாரசிய உரையாடல் - பிரேமலதா ஓபன் டாக்!

Ansgar R |  
Published : Aug 24, 2024, 05:11 PM IST

Thalapathy Vijay : சில தினங்களுக்கு முன்பு மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்று, அவரது குடும்பத்தாருடன் உரையாடினார் விஜய்.

PREV
14
"ஒரு மகனாக என் வீட்டிற்கு வந்த விஜய்" அன்று நடந்த சுவாரசிய உரையாடல் - பிரேமலதா ஓபன் டாக்!
Thalapathy Vijay

திரைப்பட பணிகள் ஒருபுறம், கட்சி பணிகள் ஒருபுறம் என்று மிகவும் பிசியான மனிதராக இப்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார் தளபதி விஜய். கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த நடிகர் விஜய், தற்பொழுது மீண்டும் தனது திரைப்பட பணிகளை துவங்கி இருக்கிறார். விரைவில் இரு திரைப்பட பணிகளையும் முடிக்கும் அவர், தீவிர அரசியலிலும் ஈடுபட உள்ளார்.

"என்ன விட்டுடு நான் போறேன்" வாழை பார்த்து கண்கலங்கிய பாலா சொன்னதென்ன? மனம் திறந்த மாரி!

24
Vijayakanth Sons

இப்போது பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இந்த திரைப்படத்தில் மறைந்த தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் காட்சிகள் AI மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு நன்றி தெரிவித்து அவரது குடும்பத்தினரை அண்மையில் சந்தித்து நன்றி கூறினார் தளபதி விஜய்.

34
Captain Vijayakanth

தனது கட்சி கொடியை அறிமுகம் செய்யும் முன், கொடியேற்ற நிகழ்வுக்கான ஒத்திகையை மேற்கொண்ட தளபதி விஜய், அங்கிருந்து நேராக புறப்பட்டு தனது "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்பட குழுவினரோடு, மறைந்த கேப்டன் விஜயகாந்தின் குடும்பத்தாரை சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. 

44
DMDK Leader Premalatha

இந்நிலையில் தளபதி விஜயின் வருகை குறித்து பேசியுள்ள தேமுதிக தலைவர் பிரேமலதா, "விஜய் எனது வீட்டிற்கு ஒரு மகனைப் போலத்தான் வந்தார். கேப்டனுக்கு அவரை மிகவும் பிடிக்கும், எனது மகன்கள் கூட அவருடைய தீவிர ரசிகர்கள் தான். இதை நான் அவரிடம் சொன்னபோது, விஜய பிரபாகரன் எனக்கு அரசியலில் மூத்தவர், அவர் வெகு சிறப்பாக இப்பொழுது செயல்பட்டு வருகிறார், அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தளபதி விஜய் கூறியதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தேசிய விருதில் சார்பட்டா பரம்பரை புறக்கணிக்கப்பட இது தான் காரணம் : பா.ரஞ்சித் ஆதங்கம்!

Read more Photos on
click me!

Recommended Stories