மக்களிடம் நன்கு அறிமுகமான ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ். தற்போது ஊரடங்கு காரணமாக பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சமீபத்தில் விவசாய அமைச்சரிடம் திவ்யா சத்யராஜ் கேட்டுக்கொண்டார்.
undefined
இதை தொடர்ந்து தற்போது 'மகிழ்மதி' என்ற இயக்கத்தை தற்போது ஆரம்பித்திருக்கிறார்.
undefined
"இந்தியாவில் ஓர் ஆண்டின் கணக்குப்படி 10 மில்லியன் திருமணங்கள் நடைபெறுகின்றன. அத்திருமணங்களில் பரிமாறப்படும் 30 விழுக்காடு உணவு வீணாகின்றன. உணவும், ஊட்டச் சத்தும் வசதி உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் இல்லை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினரும், குழந்தைகளும் கொரோனா போன்ற தொற்றுகளில் இருந்து பாதுகாக்க வேண்டுமாயின் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு தேவை.
undefined
'மகிழ்மதி இயக்கம்' அரசியல் கட்சியோ சாதி மதம் சார்ந்த அமைப்பு கிடையாது.
undefined
வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம்.
undefined
ஊரடங்கு நேரத்தில் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு தரமான உணவு வழங்குகிறோம். கொரோனா நேரத்தில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை இவ்வியக்கம் மேற்கொள்ளும்.
undefined
'மகிழ்மதி இயக்கம்' என் கனவு என் இயக்கத்திற்கு ஒரு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தபோது மகிழ்மதி, என்ற பெயர் தோன்றியது. என் அம்மா பெயர் மகேஸ்வரி அவர் பெயரின் முதல் பாதியை என் இயக்கத்தின் பெயரில் இணைக்க வேண்டும் என்பதே என் ஆசை என கூறியுள்ளார் திவ்யா சத்யராஜ். இவரின் இந்த இயக்கத்திற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
undefined