ஜனவரியில் மூன்றாவது குழந்தை... நடிகர் தனுஷ் வீட்டில் விரைவில் விசேஷம்...!

First Published Sep 2, 2020, 6:19 PM IST

நடிகர் தனுஷின் சகோதரர் மற்று பிரபல இயக்குநரான செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிக்கு விரைவில் 3வது குழந்தை பிறக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் செல்வராகவன், அவருடைய சகோதரர் தனுஷை வைத்து, கடந்த 2002 ஆம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை' என்கிற படத்தை இயக்கினார். இளவட்டத்தை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
undefined
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து இயக்கிய 'காதல் கொண்டேன்' திரைப்படம் தனுஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கு காதலும் மலர்ந்தது. பின் இருவரும் 2006 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் அந்த வாழ்க்கை 4 வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. இருவரும் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
undefined
செல்வராகவன் இயக்கிய “மயக்கம் என்ன” படத்தில், துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவருக்கும், இவருக்கும் இடையே காதல் துளிர் விட்டு அது திருமணத்திலும் முடிந்தது.
undefined
2011 இல் திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்கு 20 ஜனவரி 2012 அன்று பிறந்த மகள் லீலாவதி மற்றும் ஒரு மகன் ஓம்கர் 7 அக்டோபர் 2013 இல் பிறந்தனர்.
undefined
சமீபத்தில் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் சலசலப்பை உருவாக்கியது.அந்த போட்டோவில் பார்க்க கீதாஞ்சலி கர்ப்பமான வயிற்றுடன் இருப்பது இருக்கவே ரசிகர்கள் ஏதாவது நல்ல செய்தி இருக்கா? என தொடர்ந்து நச்சரித்து வந்தனர்.
undefined
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீதாஞ்சலி பகிர்ந்துள்ள புகைப்படம் அதை உறுதி செய்யும் விதமாக அமைந்தது. இந்த போட்டோவில் 17 வாரத்தில் இவ்வளவு பெரிய பேபி பம்ப்-ஆ என ஆச்சர்யப்படுவது போன்ற தெரிகிறது.
undefined
இந்த போட்டோ வெளியாகி வைரலான போதும் கீதாஞ்சலி, செல்வராகவன் தம்பதி 3வது குழந்தை குறித்து எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் கீதாஞ்சலி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மெளம் கலைந்துள்ளார்.
undefined
இந்த போட்டோ வெளியாகி வைரலான போதும் கீதாஞ்சலி, செல்வராகவன் தம்பதி 3வது குழந்தை குறித்து எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் கீதாஞ்சலி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மெளம் கலைந்துள்ளார்.
undefined
3வது குழந்தை ஜனவரியில் பிறக்க உள்ளதாகவும், நான், மகள் லீலாவதி, மகன் ஓம்கார், செல்வராகவன் என அனைவரும் புதுவரவை வரவேற்க காத்திருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
undefined
அத்துடன் கர்ப்ப கால வயிற்றுடன் கீதாஞ்சலி பதிவிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மற்றும் வாழ்த்துக்களும் குவிகிறது.
undefined
click me!