போதைப்பொருள் வழக்கு: ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு பதறியடித்து ஓடிவந்த பிரபல நடிகை... விசாரணைக்கு ஆஜர்...!

First Published Sep 26, 2020, 11:02 AM IST

இன்று காலை மும்பையில் உள்ள தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCA) அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 

பாலிவுட்டில் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தி திரையுலகின் முன்னணி இளம் நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
undefined
இந்த விவகாரத்தில் விசாரிக்கப்பட்டு வந்த அவருடைய காதலி ரியா சக்ரபர்த்திக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
undefined
இதையடுத்து ரியா சக்ரபர்த்தியை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். அதில் ரியா பாலிவுட்டில் போதைப் பொருள் பழக்கமுள்ள 15க்கும் மேற்பட்டோரின் பெயர்களை கூறியதாக தகவல்கள் வெளியாகின.
undefined
இதையடுத்து பாலிவுட் நடிகைகளான திபீகா படுகோனே, சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் , ஷ்ரத்தா கபூர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா ஆகியோருக்கு தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர் .
undefined
இதற்கான விசாரணையில் ஆஜராவதற்காக கோவாவில் ஷூட்டிங்கில் இருந்த நடிகை தீபிகா படுகோன, தனது கணவர் ரன்வீர் சிங்குடன் தனி விமானம் மூலம் நேற்று இரவு மும்பை வந்தடைந்தார்.
undefined
இன்று காலை மும்பையில் உள்ள தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCA) அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
undefined
போதைப்பொருள் தொடர்பான வாட்ஸ் ஆப் குரூப்பிற்கு அட்மினாக செயல்பட்டதாக திபீகா படுகோனே மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதுகுறித்த கேள்விகளை அதிகாரிகள் எழுப்ப வாய்ப்புள்ளது.
undefined
தீபிகாவின் மேனேஜரான கரிஷ்மாவிடமும் நேற்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
undefined
நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங்கிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!