சினிமால இதெல்லாம் சகஜம்.! கியூட் ஹீரோ ஜூனைத் கான் ஓப்பன் டாக்.!

Published : May 20, 2026, 11:36 AM IST

ஆமிர் கான் மகன் ஜுனைத் கான், தனது அறிமுகப் படமான ‘Ek Din’ தோல்வியடைந்தது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். சினிமாவில் இது சகஜம் என்றும், தனது தந்தையின் தயாரிப்பில் மட்டும் தொடர்ந்து நடிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

PREV
14
ஹிந்திக்கு கிடைத்த அழகான ஹீரோ

பாலிவுட்டில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயங்களில் ஒன்று, Aamir Khan மகன் Junaid Khan நடித்திருந்த ‘Ek Din’ திரைப்படத்தின் தோல்விதான். பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், அதைப் பற்றி ஜூனைத் கான் மிகவும் வெளிப்படையாகப் பேசியிருப்பது தற்போது இணையத்தில் கவனம் பெற்றிருக்கிறது. 

24
பலத்த எதிர்பார்ப்புடன் வெளியான ‘Ek Din’

மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘Ek Din’ திரைப்படத்தில் Sai Pallavi கதாநாயகியாக நடித்திருந்தார். இது சாய் பல்லவியின் பாலிவுட் அறிமுகப்படமாக இருந்ததால், படத்துக்கு ஆரம்பத்திலேயே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வெளியீட்டுக்குப் பிறகு படம் வசூலிலும், விமர்சனங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

34
முதிர்ச்சியாக பேசிய அறிமுக ஹீரோ

இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் மனம் திறந்த ஜூனைத் கான், “படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. நாங்கள் அனைவரும் அந்தப் படத்தை ரசித்தே உருவாக்கினோம். எனக்கும் அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால், பெரும்பாலான மக்களுக்கு படம் connect ஆகவில்லை என்று நினைக்கிறேன். சினிமாவில் சில நேரங்களில் இப்படிச் சம்பவிப்பது சகஜம்தான்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தந்தையான ஆமிர் கான் குறித்து பேசும்போது, “அப்பா ஒரு விஷயத்தில் முழுமையாக ஈடுபடுபவர். படம் ஓடவில்லை என்றால் வருத்தப்படுவார். ஆனால் அதிலேயே நின்றுவிடாமல் உடனே அடுத்த வேலையை நோக்கிச் செல்வார்” என கூறியுள்ளார்.

அதே நேரத்தில், “ஆமிர் கான் புரொடக்ஷன்ஸில் மட்டும் தொடர்ந்து நான் நடிக்க விரும்பவில்லை. ஒரு படம் உருவாக பல வருடங்கள் ஆகும். ஆனால் நான் இன்னும் வளர்ந்து வரும் நடிகன். எனக்கு தொடர்ந்து நிறைய படங்கள் தேவை” என்றும் ஜூனைத் கான் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

44
சினிமால இதெல்லாம் சகஜம்

ஒரு ஸ்டார் கிட் என்பதற்காக தோல்வியை மறைக்காமல், ரசிகர்கள் ஏற்காததை மிகவும் இயல்பாக ஏற்றுக்கொண்ட ஜூனைத் கானின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது. “சினிமால இதெல்லாம் சகஜம்” என்ற மனநிலையோடு அவர் கூறிய இந்த ஓப்பன் டாக், பலரையும் கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories