சித்ரா தற்கொலை... ஹேமந்தின் தந்தை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்...!

First Published Dec 19, 2020, 2:50 PM IST

இதனிடையே ஹேமந்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 
 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவின் வழக்கில் அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேமந்த் ரவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே ஹேமந்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
undefined
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரவிச்சந்திரன், சித்ராவின் தற்கொலை வழக்கு குறித்த விசாரணையை விரிவுபடுத்த வேண்டும் என்றும், விசாரணை குறுகிய வட்டத்தில் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளோம்.
undefined
மேலும் சித்ராவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து சித்ராவின் சினிமா நட்பு வட்டாரங்களையும் நெருங்கிய நண்பர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
undefined
சித்ரா தற்கொலைக்கு முந்தைய நாள்வரை இருவீட்டாரும் மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் திருமண வரவேற்பு மண்டபத்தை சித்ராவுடனே இரு வீட்டாரும் பார்க்க சென்றதாக தெரிவித்தார்.
undefined
சித்ராவின் தற்கொலைக்கு குடும்ப அளவில் எந்தவித அழுத்தமும் இல்லை எனவும் நட்பு வட்டாரத்தில் விசாரணையை அதிகரிக்க வேண்டுமென புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளதாக தெரிவித்தார். தற்கொலைக்கு முந்தைய நாள் திருமண வரவேற்பிற்காக குடும்பத்துடன் மண்டபம் பார்க்க சென்றபோது பதிவாகியிருந்த சிசிடிவி வீடியோ மற்றும் புகைப்படங்களையும் புகார் மனுவுடன் இணைந்து கொடுத்துள்ளார்.
undefined
click me!