விநாயகர் சதுர்த்திக்கு முகம் நிறைய புன்னகையோடு.. பட்டு புடவையில் புகைப்படம் வெளியிட்டு பாடாய் படுத்தும் ஷிவானி

Published : Sep 10, 2021, 05:49 PM ISTUpdated : Sep 10, 2021, 05:52 PM IST

பிக்பாஸ் ஷிவானி எப்போதும், மாடர்ன் டிரஸ் மற்றும் கவர்ச்சிகரமாக புடவை கட்டி புகைப்படம் வெளியிடுவது வழக்கம் ஆனால் தற்போது, மிகவும் மங்களகரமாக பட்டு புடவையில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  

PREV
16
விநாயகர் சதுர்த்திக்கு முகம் நிறைய புன்னகையோடு.. பட்டு புடவையில் புகைப்படம் வெளியிட்டு பாடாய் படுத்தும் ஷிவானி

ஷிவானிக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது சீரியல்கள் தான் என்றாலும், தற்போது வெள்ளித்திரை பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் அதிக முனைப்பு காட்டி வந்தார். சில இயக்குனர்கள் இவரிடம் கதை கூறி வந்தாலும், மனதிற்கு பிடித்த கதையையும், நல்ல கருத்துள்ள படங்களையும் மட்டுமே தேர்வு செய்து நடித்து, முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என கண்ணும் கருத்துமாக இருந்தார். 

26

இதற்காக இவர், திரையுலகை சேர்ந்த சில நண்பர்கள் கூடவும் நிறைய ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. எனவே தான் கடந்த சில மாதங்களாக, கண்ணை கட்டும் அளவுக்கு கவர்ச்சியை வாரி இறக்காமல், அளவான கவர்ச்சியை ரசிக்கும் படி காட்டி புகைப்படம் வெளியிட்டு வந்தார்.

36

இவர் இப்படி அளவான கவர்ச்சியோடு வெளியிடும் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் லைக்குகள் குவிந்து வந்தது.

46

முதல் படமே இவருக்கு ஜாக்பாட் வாய்ப்பு போல முதல் படத்திலேயே விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார். இதை தொடர்ந்தும் சில நடிகர்கள் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

56

இது ஒரு புறம் இருக்க, இன்றைய விநாயகர் சதுர்த்தி தினத்தை மிகவும் குதூகலமாக கொண்டாடியுள்ளார் ஷிவானி. இந்த புகைப்படம் ரசிகர்களால் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

66

பிங்க் நிற பட்டு சேலையில், பார்த்தாலே கை எடுத்து கும்பிட தோன்றும் மகாலக்ஷ்மி போல் முகம் நிறைய புன்னகையோடு போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். 
 

click me!

Recommended Stories