விதியை மீறிய போட்டியாளர்கள்..! சம்யுக்தவை அழைத்து கண்டித்த பிக்பாஸ்..!

First Published Nov 5, 2020, 6:38 PM IST

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை, போட்டியாளர்கள்... ஒரு சில விதிகளுக்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும் என்கிற நிபந்தனைகள் உள்ளது. அதனை மீறுபவர்களை பிக்பாஸ் அழைத்து கண்டிப்பது வழக்கம் தான்.
 

அந்த வகையில், இன்றைய புரமோவில் பிக்பாஸ் கேப்டன் சம்யுக்தாவை கன்ஃபக்சன் அறைக்கு அழைத்து ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார் பிக்பாஸ்.
undefined
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும், தமிழில் தான் பேச வேண்டும் என்ற விதிமுறை, அணைத்து சீசன்களிலும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
undefined
ஆனால் பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களோ , அதிக அளவில் ஆங்கில மொழியை உபயோகிப்பதால், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மக்களால்புரிந்து கொள்ளமுடியவில்லை.
undefined
குறிப்பாக பாலாஜி, சம்யுக்தா, அர்ச்சனா, சுசித்ரா, உட்பட பலர் ஆங்கிலத்தில் தான் அதிகம் பேசுகிறார்கள்.
undefined
எனவே இதனை தடுக்கும் பொருட்டு, சம்யுக்தாவிடம் பிக்பாஸ் அனைவரும் தமிழில் தான் பேசவேண்டும் என எச்சரிக்கையுடன் கூறியுள்ளார். இதற்கு பிக்பாஸிடமும் ஆங்கிலத்தில் பதில் கூறிய சம்யுக்தா பின்னர் ஒருவராறு சமாளிக்கின்றார்.
undefined
அதன்பின் வெளியே வரும் சம்யுக்தா, ‘போட்டியாளர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசக் கூடாது என்றும் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்பதை தமிழில் அவர் தட்டுத்தடுமாறி கூறுவதும், ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் தமிழில் என்ன? என்று அவர் அருகில் இருப்பவரிடம் கேட்டு கேட்டுக் கூறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
undefined
click me!