பட்டப்பகலில் கோவாவில் நிர்வாண பட ஷூட்டிங்... நடிகை பூனம் பாண்டே கைது...!

First Published Nov 5, 2020, 6:06 PM IST

பொது இடத்தில் ஆபாச படமெடுத்தற்காக பூனம் பாண்டே உள்ளிட்ட படக்குழுவினரை போலீசார் கைது செய்தனர்.

ஆபாச படங்களில் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை பூனம் பாண்டே. அவ்வப்போது சோசியல் மீடியாவிலும் முழு மற்றும் அரை நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
undefined
கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி தான் இவருக்கும் நீண்ட நாள் காதலரான சாம் பாம்பே என்பவருக்கும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் சிம்பிளாக திருமணம் நடந்தது.
undefined
திருமணமான 13வது நாளாக கணவர் தன்னை அடிப்பதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பின்னர் அவரே முன்வந்து நாங்கள் இருவரும் சமாதானம் ஆகிவிட்டோம் என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
undefined
இப்படி எப்போதும் தன்னை பரபரப்பாக பேச வைத்து வரும் பூனம் பாண்டே, கோவாவில் உள்ள சபோலி அணையில் நிர்வாண நிலையில் ஆபாச படம் எடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
undefined
பட்டப்பகலில் எடுக்கப்பட்ட இந்த ஆபாச வீடியோ படப்பிடிப்பை தடுக்க தவறியதற்காகவும், சம்மந்தப்பட்ட நபர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய தாமதப்படுத்தியதற்காவும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
undefined
மேலும் கோவாவின் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட்ட பூனம்பாண்டே மற்றும் படக்குழுமீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
undefined
மாடல் பூனம் பாண்டேவின் அரை நிர்வாண போட்டோஷூட்டை நீர்த்தேக்கத்தில் அனுமதித்ததற்காக தற்போது கனகோனா போலீஸ் இன்ஸ்பெக்டர் துக்காராம் சவான் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
undefined
இதையடுத்துது பொது இடத்தில் ஆபாச படமெடுத்தற்காக பூனம் பாண்டே உள்ளிட்ட படக்குழுவினரை போலீசார் கைது செய்தனர்.
undefined
click me!