கடந்த ஆண்டு துவங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி கொடுத்தார் அர்ச்சனா.
undefined
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி துவங்கிய ஒரு வாரம் கழித்து தான், அர்ச்சனா வயல் கார்டு போட்டியாளராக, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தாலும் அனைவரையும் தன்னுடைய அன்பால் கட்டிப் போட தொடங்கினார். அன்பு ஜெயிக்கும், அன்பு ஜெயிக்கும், என்கிற வார்த்தை இவராலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது.
undefined
கடைசிவரை இவர் அன்பை காட்டியது மற்றவர்களை சுதந்திரமாக விளையாட விடாமல் முடக்கிப் போட்டது என்பதை அறியாமலேயே இருந்த அர்ச்சனா, பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரே இந்த உண்மையை அறிந்திருப்பார்.
undefined
மேலும் ஆரிக்கு எதிராகவும், ரியோவிற்கு ஓவர் சப்போர்ட் செய்த இவர் மீது ரசிகர்களுக்கு தற்போது வரை சில ரசிகர்கள் சிறு கோபத்துடன் தான் உள்ளார்கள். ஆனால் பிக்பாஸ் நேரடியாக நின்று சண்டை போட்டவர்கள் தற்போது ஒன்று சேர்த்துவிட்டனர்.
undefined
அர்ச்சனாவின் தங்கை அனிதாவிற்கு தடபுடலாக தன்னுடைய வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார் அர்ச்சனா. ஏற்கனவே 4 மாதத்தில் நடைபெற்ற சடங்கின் போது, இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் இந்த வளைகாப்பில் கூடுதல் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் அர்ச்சனா.
undefined
அர்ச்சனா தங்கை அனிதாவின் விசேஷத்தில், பிக்பாஸ் பிரபலங்கள் ஆரி, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், கேபி, சுரேஷ் தாத்தா என பலர் கலந்து கொண்டு இவரை வாழ்த்தியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
undefined