ஜாதியை வைத்து சர்ச்சையை இழுத்த பாடகி சுசித்ரா... பாலாஜி போட்டோவுடன் வெளியிட்ட பதிவால் சிக்கல்...!

First Published Dec 1, 2020, 5:56 PM IST

சோசியல் மீடியாவில் சுசித்ரா ‘ஜாதி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது நெட்டிசன்களை கோபப்படுத்தியுள்ளது.  

தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே நுழைந்த சுசித்ரா, வந்த வேகத்திலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் என்று பெருமை பெற்றார்.
undefined
பிக்பாஸ் வீட்டுக்குள் பாலாஜியுடன் மட்டும் அதிகமாக நட்பு பாராட்டி வந்த சுசித்ரா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் போது, ரியோ, அர்ச்சனா, நிஷா, சோம், ரமேஷ் ஆகியோர் ஒரு குழுவாகவும் பாலாஜி, சம்யுக்தா, ஷிவானி, ஆஜித் ஆகியோர் ஒரு குழுவாகவும் இருப்பதாக கருத்து தெரிவித்தார்.
undefined
மேலும் ஆரி, அனிதா, சனம் ஆகியோர் தனியாக செயல்பட்டதாகவும், ஆரி தான் கூறுவதை பொறுமையாக கேட்பார், நேர்மையானவர் என்று கூறினார்.
undefined
பிக்பாஸ் வீட்டிற்குள் சொல்வதற்கு முன்பு சோசியல் மீடியா பக்கமே திரும்ப மாட்டேன் என சத்தியம் செய்த சுசித்ரா, எலிமினேட் ஆகி வெளியே வந்ததில் இருந்து சோசியல் மீடியாவே கதி என்று இருக்கிறார்.
undefined
அப்படி ஒரு சர்ச்சை பதிவை போட்டு சிக்கலில் சிக்கியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் தனக்கு பிடித்த போட்டியாளரான பாலாஜியின் போட்டோவை பதிவிட்ட சுசித்ரா, “எங்கள் ஜாதியே வேற” என்று பதிவிட்டார்.
undefined
சோசியல் மீடியாவில் சுசித்ரா ‘ஜாதி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது நெட்டிசன்களை கோபப்படுத்தியுள்ளது. பாலாஜியைப் பற்றி கூறுவதற்கு ஏன் ஜாதி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள் வேறு ஏதாவது வார்த்தையை பயன்படுத்தியிருக்கலாமே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
undefined
அதற்கு பதிலளித்துள்ள சுசித்ரா, “ஜாதியை எப்படி மாற்றமுடியும். அது ஏதோ ஒரு பொறாமை பிடித்தவர் கல்லில் செதுக்கிய கணக்கு. அதை தவறாக பார்க்க வேண்டாம். நான் சொன்னதை வேறு அர்த்தத்தில் பாருங்கள். நான் எப்போதும் திராவிட சாதி என்பதை பெருமையாக சொல்வேன்” என பதிவிட சர்ச்சை தற்போது கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.
undefined
click me!