இனி அந்த வார்த்தையை சொன்ன அவ்வளவு தான்... வனிதாவை நேரடியாக எச்சரித்த கஸ்தூரி...!

First Published Oct 20, 2020, 6:58 PM IST

பீட்டர் பாலுடனான பிரிவு குறித்து வனிதா உருக்கமாக வெளியிட்ட பதிவால் கடுப்பான கஸ்தூரி பதிலடி கொடுக்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார்.

கோவாவில் வனிதாவின் 40வது பிறந்தநாளை கொண்டாட குடும்பம் மொத்தமும் சென்றிருந்தது. அப்போது பீட்டர் பால் நன்றாக குடித்துவிட்டு வந்த வனிதாவிடம் வம்பு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பொறுமையாக இருந்த வனிதா, ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாகி பீட்டர் பாலை அடி வெளுத்துவிட்டாராம்.
undefined
தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான சில பதிவுகளை பதிவிட்டு மனவேதனையை வெளிக்காடினார். அதில், காதலில் தோல்வி அடைவது பழக்கமாகிவிட்டது. ஆனால் நான் அதை எல்லாம் கடந்து தைரியமாக இருப்பேன். காதலில் நம்பிக்கை வைத்து ஏமாறுவது மிகவும் வேதனையானது, தாங்க முடியாத வலியை தருகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் உங்களுக்கு அது பெரிதாக தெரியாது.
undefined
உங்கள் கண் முன்பு வாழ்க்கை பறிபோவது தான் மிகவும் வேதனையானது. அதை நான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது நடந்திருக்கக் கூடாது என்று நான் சொல்ல முடியாது. ஏனென்றால் வாழ்க்கை ஒரு பாடம். நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
undefined
போலி செய்திகளை படித்துவிட்டு ஏதாவது பேச வேண்டாம். நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் என்னை திட்டுவது சரி அல்ல. அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு அதை நான் கொடுத்தேன். என் கனவுகள், வாழ்க்கையின் நம்பிக்கை எல்லாம் நொறுங்கும் நிலையில் நான் இருக்கிறேன். நான் பாசிட்டிவாக இருந்தாலும், பயமாக இருக்கிறது.
undefined
வாழ்க்கையில் பல விஷயங்களை பார்த்த தைரியமான பெண் நான். இதுவும் கடந்து போகும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து எதையும் யூகிக்காதீர்கள், ஏனென்றால் அது காயப்படுத்துகிறது. அன்பு ஒன்று தான் என்னை பாதிக்க முடியும். எனக்கு அதிசயங்கள் மீது நம்பிக்கை உள்ளது. அப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
undefined
இந்த நேரத்தில் நான் யாருக்கும் இதற்கு மேல் விளக்கம் அளிக்க வேண்டியது இல்லை. இது என் வாழ்க்கை. நான் தான் எதிர்கொள்ள வேண்டும். பீட்டர் பால் மீது குறை சொல்லி நான் அதன் மூலம் நல்லவர் போன்று தெரிய, அனுதாபம் பெற விரும்பவில்லை. நான் எதிர்பார்க்காத ஒன்று நடந்துவிட்டது. என் குழந்தைகளின் நலனை மனதில் வைத்து நல்ல முடிவை எடுப்பேன். அதிசயம் நடக்க பிரார்த்தனை செய்கிறேன். அப்படி நடக்காவிட்டால் நான் எதிர்கொள்வேன். என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
undefined
ஏற்கனவே வனிதா பீட்டர் பாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், லிப் லாக் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்தது தான் சர்ச்சையை உருவாக்கியது. இதை விமர்சித்த நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோருடனும் மோதல் போக்கை வனிதா கடைபிடித்தார்.
undefined
தற்போது அந்த பிரச்சனைகள் எல்லாம் சற்றே ஓய்ந்திருந்த நிலையில் வனிதாவின் இந்த ட்விட்டர் பதிவிற்கு கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிரைவேட்டாக இருக்க வேண்டும் என்றால், அதை பற்றி சமூக வலைதளத்தில் பேசாதீர்கள். டெய்லி அப்டேட் கொடுப்பதுடன் இது போன்று அறிக்கை விடுவது ஏன்?.
undefined
அவரை யாரும் மீடியா சர்கஸ் ஆக்கவில்லை. அவர் தான் அப்படி ஒரு சர்கஸை உருவாக்கினார். அவரின் சர்கஸ், அவரின் குரங்குகள். தான் ஒரு ரிங் மாஸ்டர் என்று நினைத்தார். ஆனால் ஜோக்கர் ஆகிவிட்டார்.
undefined
இன்னொரு முறை நான் ஆனஸ்டா சொல்றேன், ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு நபர் என்கிற வார்த்தைகளை கேட்டேன், அவ்வளவு தான் என்று நேரடியாகவே வனிதாவை எச்சரித்துள்ளார் கஸ்தூரி.
undefined
click me!