சர்ச்சை என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தமாக வலம் வருகிறார் மீரா மிதுன். இப்போது மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டில் காலடி எடுத்த வைத்த நாளில் இருந்தே மீரா மிதுன் மீது சர்ச்சைக்கு பஞ்சமில்லை.
undefined
ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்த கதையாக பிக்பாஸ் நிகழ்ச்சி மீதும், அதனை தொகுத்து வழங்கி வந்த கமல் ஹாசன் மீதும் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வந்தார். ஆனால் இவர் என்ன தான் கத்தினாலும் யாரும் காதில் வாங்கியதாக தெரியவில்லை.
undefined
அரைகுறை ஆடையில் போட்டோ வெளியிட்டு அடையும் பிரபலத்தை விட ஏற்கனவே பிரபலமடைந்தவர்களை தரக்குறைவாக விமர்சித்தால் தன்னைப் பற்றிய பேச்சுக்கள் அதிகம் கிளம்பும் என கணக்கு போட்ட மீரா மிதுன், ரஜினி, கமல், விஜய், சூர்யா, த்ரிஷா, நயன்தாரா, குஷ்பு என திரையுலகினர் பலரையும் விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தார்.
undefined
உச்சகட்டமாக நடிகர்கள் விஜய், சூர்யாவின் மனைவிகள் குறித்து கேவலமான வார்த்தைகளில் பேசி மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ அவருக்கே ஆப்பாக மாறியது. இயக்குநர் பாரதிராஜா முதல் திரையுலகினர் பலரும் மீரா மிதுனின் செயலைக் கண்டிக்க ஆரம்பித்தனர்.
undefined
திரைப்பிரபலங்களை தரக்குறைவாக பேசியதால் சோசியல் மீடியாவில் மீரா மிதுனை வசைபாடும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. அடுத்தடுத்து குவிந்த புகார்களால் மீரா மிதுன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
undefined
இதனால் சில நாட்களாக பெரிதாக எவ்வித சர்ச்சையையும் ஆரம்பிக்காமல் இருந்த மீரா மிதுன், திடீரென பிரதமர் மோடியை டேக் செய்து பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
நான் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன அழுத்தத்தில் உள்ளேன். என் உடைய மன உளைச்சலை அனைத்து சோசியல் மீடியாக்களிலும் பதிவு செய்து வருகிறேன். தொடர்ந்து என்னை துன்புறுத்துவதால் என் மன ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நான் இறந்துவிட்டால் என்னுடையை சாவுக்கு காரணமானவர்கள் அனைவரையுக் தூக்கிலிட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் பிரதமர் மோடிக்கு டேக் செய்துள்ளார்.
undefined
மீரா மிதுனின் இந்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள் நாட்டை காக்கும் பிரதமருக்கு இதுதான் வேலையா?. விளம்பரம் தேடுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? என சகட்டுமேனிக்கு மீரா மிதுனை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
undefined