மாறி வரும் காலச்சூழலில், தொலைந்து கொண்டிருக்கும் தமிழர் நாகரீகத்தை அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் காட்டக்கூடிய வரலாற்று பொக்கிஷங்களாக பாரதிராஜாவின் படங்கள் உள்ளன. மண்வாசனையின் சொந்தக்காரரான இவர், தமிழ்நாட்டு கிராமங்களின் வாழ்வியலை ரத்தமும் சதையுமாக திரைப்படங்களில் பதிவு செய்ய முடியும் என காட்டிய பெரும் கலைஞன். 80 வயதைக் கடந்துவிட்ட நிலையில், மனதளவில் இன்னும் யூத் ஆகவே இருந்து வருகிறார். கலை மீது அவர் கொண்ட ஆர்வத்தையும் காதலையும் இன்றும் உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கிறார்.