'பாரதி கண்ணம்மா' ரோஷினிக்கு என்ன ஆச்சு..? உண்மையை போட்டுடைத்த நடிகை..!

First Published Jan 4, 2021, 12:43 PM IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை ரோஷினிக்கு திடீர் என மனநிலை மாறியது போல் அவர் நடந்து கொண்டதாகவும் பின்னர், மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்ற பின்னரே அவர் நலமடைந்ததாக ஒரு தகவல் வெளியான நிலையில், இதுகுறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது.
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
undefined
பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.
undefined
இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ரோஷினி.
undefined
மாடல் அழகியான இவர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார்.
undefined
சமீபத்தில் கர்ப்பிணியான கண்ணம்மா வீட்டை விட்டு விரட்டப்பட்டு கையில் பையுடன் ரோடு ரோடாக சுற்றும் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. இதனால் கடுப்பான ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலைத்தனர். ஆனால் அந்த மீம்ஸ்கள் அனைத்தும் வேற லெவலுக்கு ட்ரெண்டாகி சீரியலையும் ரோஷினியையும் மேலும் பிரபலமடைய வைத்தது.
undefined
தற்போது தைரியமான பெண்ணாக தனது குழந்தையை வளர்க்க போராடும் கண்ணம்மாவின் கதாபாத்திரம் இல்லத்தரசிகளை வெகுவாக கவர, சீரியலும் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.
undefined
இந்நிலையில் இவர் இந்த சீரியல் கதாபாத்திரத்தில் மூழ்கிவிட்டதால், திடீர் என என் குழந்தை எங்கே... என்பது போல் கேட்க துவங்கி விட்டதாக ஒரு வதந்தி வேகமாக பரவியது.
undefined
பின்னர் தற்போது இதுகுறித்து விசாரித்த போது, ரோஷினி நலமுடன் தான் உள்ளார். அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை, இது யாரோ கொளுத்தி போட்ட வதந்தி என்பதை, ரோஷினி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
undefined
click me!