கண்ணம்மாவின் கணவரும், தன்னுடைய பாலிய நண்பருமான நாயகன் பாரதியை திருமணம் செய்து கொள்ள, இவர் செய்யும் வில்லத்தனம் எல்லாம் பார்பவர்களையே கோபமடைய செய்யும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை முரட்டு தனமாக வெளிப்படுத்தி வருகிறார். உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்ட, காதலி கண்ணம்மாவை தற்போது பாரதி பிரிந்திருக்க காரணமும் இந்த வில்லி வெண்பா தான்.