'இரண்டாம் குத்துக்கு' ஆப்பு வைக்க தயாரான தமிழக அரசு..! அதிரடி காட்டும் அமைச்சர்..!

First Published Oct 11, 2020, 7:14 PM IST

தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் எந்தக் காட்சிகளாக இருந்தாலும், திரைப்படங்களாக இருந்தாலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் சாதனங்களாக இருக்க வேண்டும்.
 

தமிழ் சினிமாவில் இப்படியொரு ஆபாசமா? என காண்போர் வெட்கி கூசும் வகையில் “இரண்டாம் குத்து” என்ற அடல்ட் படம் தயாராகியுள்ளது. வக்கிரத்தின் உச்சமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது.
undefined
இரட்டை அர்த்த வசனங்கள், படுக்கை அறை காட்சிகள், முத்தக்காட்சிகள் என கிட்டதட்ட பிட்டு படங்களை மிஞ்சும் அளவிற்கு வெளியாகியுள்ள டீசரைக் கண்டு தமிழ் திரையுலகினர் கொதித்து போயுள்ளனர் மக்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள்.
undefined
இந்த மாதிரியான கேவலமான படங்கள் குழந்தைகளின் மனதில் விஷத்தை கலக்கும் என்பதால் “இரண்டாம் குத்து” படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
undefined
சோசியல் மீடியாவில் இந்த படத்தின் டீசரைப் பார்த்து கழுவி ஊத்ததவர்களே இல்லை எனும் அளவிற்கு தாறுமாக கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.
undefined
ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத படக்குழு இரண்டாம் குத்து எனும் ஆபாச படத்தின் போஸ்டரை ஊரெல்லாம் ஒட்டும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
undefined
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலே தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
undefined
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி கொடுக்கும் பட்சத்தில் தமிழகத்திலும் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படும். அப்படி தியேட்டர் திறக்கும் முதல் நாளே இந்த படத்தை திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined
டீசரில் மிகவும் ஆபாசமான காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
undefined
இப்படி ஆபாச காட்சிகள் நிறைந்த இந்த படத்திற்கு, ஒருபக்கம் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, “‘இரண்டாம் குத்து’ படத்துக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். சென்சார் போர்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஆபாச காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு வலியுறுத்தும்.
undefined
தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் எந்தக் காட்சிகளாக இருந்தாலும், திரைப்படங்களாக இருந்தாலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் சாதனங்களாக இருக்க வேண்டும். தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் வகையில் எந்தப் படம் வந்தாலும், யாருடைய படமாக இருந்தாலும் அதனைத் தடுக்கும் வகையில் அரசு முழு கவனத்துடன் சென்சார் போர்டு மூலமாக தடைவிதிக்க தமிழக அரசு ஆவணம் செய்யும்” இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.
undefined
click me!