
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த ’தெய்வத்திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த ’தெய்வத்திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா.
இந்த படத்தை தொடர்ந்து ’சைவம்’, 'விழித்திரு' ஆகிய தமிழ் படங்களிலும், சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து ’சைவம்’, 'விழித்திரு' ஆகிய தமிழ் படங்களிலும், சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது டீன் ஏஜ் பெண்ணாக இருக்கும் சாரா அர்ஜூன், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது டீன் ஏஜ் பெண்ணாக இருக்கும் சாரா அர்ஜூன், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் புதிய படம் ஒன்றில் சாரா ஆக்ஷன் ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புதிய படம் ஒன்றில் சாரா ஆக்ஷன் ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் அருண்விஜய் நடிப்பில் ‘பாக்ஸர்’ என்ற திரைப்படத்தை இயக்கவிருந்த இயக்குனர் விவேக், அந்த படம் கிடப்பில் போடப்பட்டதால் தற்போது சாரா அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை இயக்கக முடிவு செய்துள்ளார்.
நடிகர் அருண்விஜய் நடிப்பில் ‘பாக்ஸர்’ என்ற திரைப்படத்தை இயக்கவிருந்த இயக்குனர் விவேக், அந்த படம் கிடப்பில் போடப்பட்டதால் தற்போது சாரா அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை இயக்கக முடிவு செய்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் சாராவுடன் மற்றொரு கதாபாத்திரத்தில், பிரியாமணியும் நடிக்கவுள்ளனர்.
இந்த திரைப்படத்தில் சாராவுடன் மற்றொரு கதாபாத்திரத்தில், பிரியாமணியும் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தில் சாரா அர்ஜூன் கல்லூரி மாணவியாக நடிக்கவிருப்பதாகவும், ஒரு பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல், இந்த படத்தில் சாரா அர்ஜுனுக்கு ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் சாரா அர்ஜூன் கல்லூரி மாணவியாக நடிக்கவிருப்பதாகவும், ஒரு பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல், இந்த படத்தில் சாரா அர்ஜுனுக்கு ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் மும்பையில் நடைபெற உள்ளதாகவும் அதன் பின்னர் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்தபின் ஜனவரியில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் இயக்குனர் விவேக் கூறியுள்ளார். சென்னை உள்பட பல இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் மும்பையில் நடைபெற உள்ளதாகவும் அதன் பின்னர் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்தபின் ஜனவரியில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் இயக்குனர் விவேக் கூறியுள்ளார். சென்னை உள்பட பல இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது