கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு தற்போது கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற்று வருகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தாய்லாந்தில் ஷூட்டிங் நடைபெற்று வந்தநிலையில் தற்போது அணைத்து பணிகளும் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
undefined
இதில் மேலும் விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ரகுமான், கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
undefined
சுமார் 400 கோடி செலவில் லைகா நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்ட தயாரித்து வருகிறது.
undefined
கல்கியின் காவிய படைப்புகளில் வந்திய தேவனாக கார்த்தியும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
undefined
இந்த படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக இந்தி நடிகை சோபிதா துலிபாலா என்பவர் இணைந்துள்ளார். பரதம் மற்றும் குச்சிபுடியில் தேர்ந்த இளவரசி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
undefined
இதையடுத்து ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து சோபிதாவும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார் என்கிற தகவல்களும் வெளியாகியது.
undefined
''பொன்னியின் செல்வன்'' நாவலின் வில்லி கதாபாத்திரமான நந்தினி கெட்டப்பில் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
undefined
தற்போது ஷூட்டிங் பணிகள் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், இந்த படத்தின் மீதான ஆர்வத்தை கொஞ்சம் கூட குறைத்து கொள்ளாமல், தொடர்ந்து படத்திற்கு தேவையான வேளையில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் மணிரத்னம்.
undefined
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, குழந்தை நட்சத்திரம் பேபி சாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.தற்போது அவர் வளர்த்து, டீன் ஏஜ் பெண்ணாக இருப்பதால் இளம் நாயகி போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பாரா என எதிர்ப்பார்க்கின்றனர் ரசிகர்கள்.
undefined